மறம் என்ற தமிழ்ச் சொல்லில் தீரம், வீரம், சினம், சீற்றம், வலிமை, ஆற்றல், வெற்றி, அமர், அழித்தல், கொல்லல் என பத்துப் பண்புகளும் அடங்கியிருக்கிறது. இவைகளைப் பற்றி ”ஒப்பிலக்கிய நோக்கில் சங்க காலம்” என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. [சான்று தேவை]

பத்துப் பண்புகள் தொகு

மறம் என்ற சொல் குறிக்கும் பத்துப் பண்புகளின் விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது:

தீரம் : எதையும் துணிவுடன் செயல்படுத்தும் திறன்.

வீரம் : பராக்கிரமமான மனவலிமை, எச்சூழ்நிலையிலும் தளரா மனம், ஆயிரம் பேர் எதிர்கொண்டாலும் ஒற்றை ஆளாய் நின்று சமாளிக்கும் (எதிர்க்கும்) திறன்.

வலிமை : தனது நிலைபாட்டின் மீது உள்ள உறுதி, பலம். அதாவது நக்கீரன் தனது வாதத்தின் மீது வைத்துள்ள நிலைபாட்டை போல.

ஆற்றல் : எதையும் காலம் தாழ்த்தாமல் விரைவில் செய்து முடிக்க கூடிய திறன் கொண்டிருத்தல்.

சினம்  : கோபம்.

சீற்றம்  : அநீதிகளைக் கண்டு பொங்கி எழுதல் மற்றும் ஒரு செயலின் மீதான தீவிரம்.

அமர்  : உக்கிரமான போர்முறைகளில் கைதேர்ந்தவர்கள்; எச்செயலிலும் பின்வாங்காதவர்கள்.

அழித்தல் : ஒரு செயலுக்குத் தீர்க்கமான முடிவெடுத்தல்; அச்செயல் மீண்டும் உருப்பெறாமல்அழித்தல்.

வெற்றி  : செயல்களனைத்தையும் நீதிக்கு உடன்பட்டு களிப்புறுதல், தோல்விக்குத் தினம் தினம் முற்று வைத்தல்.

கொல்லுதல்: நீதிக்குத் தலைவணங்கல். மனுநீதி சோழனைப் போல, நீதிக்குப் பிறகே மற்றவை(பந்தபாசம்) எல்லாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறம்&oldid=3602484" இலிருந்து மீள்விக்கப்பட்டது