மலைமுரசு (இதழ்)

மலைமுரசு இலங்கை, கண்டியிலிருந்து 1963களில் வெளிவந்த ஒரு கலை, இலக்கிய சஞ்சிகையாகும். அக்காலகட்டங்களில் மலையகத்தில் பல இலக்கியவாதிகளை உருவாக்குவதற்கு இச்சஞ்சிகை பெரிதும் உதவியுள்ளது. மலைநாடு நல்வாழ்வு வாலிபர் சங்கம் சார்பாக இந்த இதழ் வெளிவந்தது.[1]

கூட்டாசிரியர்கள் தொகு

  • க. ப. சிவம்
  • மு. கு. ஈழகுமார்

உள்ளடக்கம் தொகு

மலைமுரசு இதழ் மலையகம் தொடர்பான பல்வேறு கட்டுரைகளையும், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், நாடகங்கள், மலையக கலை இலக்கிய தகவல்கள் போன்ற பல்வேறு ஆக்கங்களையும் கொண்டிருந்தது.

மேற்கோள்கள் தொகு

  1. வி.ரி. தர்மலிங்கம் (2013). மலையகம் எழுகின்றது. எழுநா. பக். 92. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைமுரசு_(இதழ்)&oldid=2069204" இலிருந்து மீள்விக்கப்பட்டது