மழைத்தூவான்

மழைத்தூவான் (Irrigation sprinkler) என்பது ஒரு நுண்நீர்ப்பாசனக் கருவி. இது நீரை சிக்கனமாக பயன்படுத்த உதவுகிறது. மழைத்தூவான் மூலம் பாசனம் செய்வதால் நீர் பயன்படுதிறனும் அதிகரிக்கும்.[1]

மழைத்தூவான்

பயன்கள் தொகு

  • 50 சதவீத நீர் சேமிக்கப்படுகிறது.
  • வேலையாட்களின் தேவை குறைவு.
  • மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
  • மற்ற பாசன முறைகளில் அதிக அளவு மண்ணில் உள்ள கீழ் அடுக்குகளுக்கு சென்று விடுகிறது.
  • மற்ற பாசன முறைகளில் மேல் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அடிமண் அடுக்குகளுக்கு நீர் மூலம் சென்றுவிடுகிறது. மேலும் மேல் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மண் அரிமாணம் மூலம் அடித்து செல்லப்படுகிறது. ஆனால் மழைத்தூவான் மூலம் நாம் பாசனம் செய்தால் இவை தவிர்க்கப்படுகின்றது.
  • மழைத்தூவான் மூலம் நாம் நீரை மழைபோல பாசனம் செய்வதால் காற்று மண்ணுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
  • நோய் மற்றும் பூச்சிகளின் தாக்குதலை குறைக்கிறது. நோய் காரணிகள் மற்றும் சிறு பூச்சிகள் நீரில் அடித்து செல்லப்படுகிறது.
  • மழைத்தூவான் மூலம் பாசனம் செய்கின்ற நீரில் நாம் ஊட்டச்சத்துக்களை கரைத்து உரப்பாசனம் செய்யலாம்.
  • மழைத்தூவான் மூலம் பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சாலைக் கொல்லி மருந்துகளையும் பாசன நீருடன் கலந்து தேவையான போது தெளிக்கலாம். இதன் மூலம் வேலையாள் செலவு குறைவதுடன் நிலத்தில் உள்ள எல்லா இடத்திற்கும் ஈடுபொருட்களை இடலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. "CHAPTER 5. SPRINKLER IRRIGATION". www.fao.org. பார்க்கப்பட்ட நாள் 2016-08-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மழைத்தூவான்&oldid=3324473" இலிருந்து மீள்விக்கப்பட்டது