முகமது பாரூக் (எழுத்தாளர்)

முகமது பாரூக் (பிறப்பு: சூலை 13 1948) இவர் சிங்கப்பூர் எழுத்தாளராவார். தமிழ்நாடு தோப்புத்துறையில் பிறந்த இவர் ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், வேதாரய்ம் இடைநிலைப் பள்ளியிலும் தனது கல்வியைத் கற்றுமுடித்தார். உணவகத்தில் பணிபுரியும் இவருக்கு தமிழ், மலாய், ஆங்கிலம் போன்ற மொழிகளில் நன்கு புலமையுண்டு.

இலக்கியப் பணி தொகு

1965ல் எழுதத் தொடங்கிய இவரது கன்னியாக்கம் திரையொளியில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து சிறுகதை, புதுக்கவிதை, கட்டுரை என பல்துறைகளிலும் ஈடுபாடு செலுத்த ஆரம்பித்தார்.

வகித்த பதவிகள் தொகு

சென் ஜான்ஸ் ஆம்புலன்சில் ஐந்தாண்டு சேவையாற்றியுள்ள இவர் தோப்புத்துறை முஸ்லிம் சங்க செயற்குழு உறுப்பினராகவும், ஜாமியாவின் தொண்டூழியராகவும் பணியாற்றியுள்ளார்.

உசாத்துணை தொகு

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு