முன்னோடி (சிற்றிதழ்)
முன்னோடி இலங்கை, நாவலப்பிட்டியிலிருந்து 1962ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.
ஆசிரியர் தொகு
- மறைமோகன்
பணிக்கூற்று தொகு
ஈழநாட்டு முஸ்லிம்களின் இலட்சிய மாத இதழ்
உள்ளடக்கம் தொகு
ஈழநாட்டு முஸ்லிம்களின் இலட்சிய மாத இதழ் என்ற பணிக்கூற்றுடன் வெளிவந்தபோதிலும்கூட இவ்விதழில் மலையகத்தில் வாழும் முஸ்லிம்களின் செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன. நாவலப்பிட்டி எனுமிடம் கண்டிமாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும்.