மெரி இலாட்சு அரண்மணை

கேரள அரண்மனை

மெரி லாட்ஜ் அரண்மனை (Merry Lodge Palace) என்பது இந்தியாவின், கேரளத்தின், திருச்சூர் நகரில் அமைந்துள்ள ஒரு அரண்மனை ஆகும். இது கொச்சி இராச்சியத்தின் அரசர் பதவியை விட்டு விலகிய இராம வர்மா XV அரசரின் அரண்மனை மற்றும் கோடைகால தங்குமிடம் ஆகும். இந்த அரண்மனையானது 1925 இல் மகாத்மா காந்திக்கும் ராம வர்மா XV க்கும் இடையிலான சந்திப்பு நிகழ்ந்த இடமாக உள்ளது. 1947 இல் இது ஸ்ரீ கேரள வர்மா கல்லூரியாக மாற்றப்பட்டது. அரண்மனை மற்றும் அதன் மதிலுக்குட்பட்ட பகுதியானது 22 ஏக்கர்கள் (8.9 ha) பரப்பளவு கொண்டது. [1] [2] [3] [4]

குறிப்புகள் தொகு

  1. "Merry Lodge Palace". Mathrubhumi. Archived from the original on 2014-12-15. பார்க்கப்பட்ட நாள் 2014-12-15.
  2. "History". Kerala Varma. Archived from the original on 2014-12-15. பார்க்கப்பட்ட நாள் 2014-12-15.
  3. "Kerala Varma College". Veethi.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-15.
  4. "Excel in tackling challenges of life, students told". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2014-12-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரி_இலாட்சு_அரண்மணை&oldid=3576253" இலிருந்து மீள்விக்கப்பட்டது