மேலக்காவேரி கைலாசநாதர் கோயில்
மேலக்காவேரி கைலாசநாதர் கோயில் என்பது தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் ஒன்றான தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மேலக்காவேரி என்னும் இடத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். [1]

அமைவிடம்
தொகுஇக்கோயில் மேலக்காவேரியில் கீழத்தெருவில் அமைந்துள்ளது.
அமைப்பு
தொகுநுழைவாயிலில் உள்ள சிறிய ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது மண்டபம் உள்ளது. அதில் நந்தியும், பலி பீடமும் காணப்படுகின்றன. அடுத்து உள்ளே செல்லும்போது வலது புறம் சித்தி விநாயகர், இடது புறம் பால தண்டாயுதபாணி. கருவறையில் மூலவர் கைலாசநாதர் உள்ளார். மூலவருக்கு முன் இரு புறமும் தண்டியும், முண்டியும் உள்ளனர். மூலவர் கருவறையின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர். மூலவர் கருவறையின் இடது புறமாக கற்பகாம்பாள் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் முன்பாக இரு புறமும் ஜெயா, விஜயா உள்ளனர். திருச்சுற்றில் ஞானசம்பந்தர், சொக்கியார் அம்மையார், சந்திரன், கால பைரவர், சனீஸ்வரன், சூரியன் ஆகியோர் உள்ளனர். நிருதி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், சுந்தரேஸ்வரர், மீனாட்சி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன.
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் கைலாசநாதர், இறைவி கற்பகாம்பாள்.
கும்பகோணம் சப்தஸ்தானம்
தொகுகும்பகோணத்தை மையமாகக் கொண்டு கும்பகோணம் சப்தஸ்தான விழாவில் தொடர்புடைய ஏழு தலங்கள் உள்ளன. 2016இல் சப்தஸ்தான பல்லக்கு பல்லக்கு சீர்செய்யப்பட்டு, வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது. [2] 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது. [3] பல்லக்குத் திருவிழா 23 ஏப்ரல் 2016 இரவு 7.30 மணிக்கு கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் தொடங்கி கீழ்க்கண்ட கோயில்களுக்குச் சென்று இக்கோயிலில் 25 ஏப்ரல் 2016 காலை நிறைவுற்றது.
- கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்
- திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், சாக்கோட்டை
- தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில், தாராசுரம்
- திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், திருவலஞ்சுழி
- கும்பகோணம் கோடீஸ்வரர் கோயில், கொட்டையூர்
- மேலக்காவேரி கைலாசநாதர் கோயில், மேலக்காவேரி
- சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில், சுவாமிமலை
குடமுழுக்கு
தொகு21 மார்ச் 2005 திங்கட்கிழமை (தாரண வருடம் பங்குனி 8ஆம் நாள்) மற்றும் 2 நவம்பர் 2015 திங்கட்கிழமை (மன்மத வருடம் ஐப்பசி 16)[4] ஆகிய நாள்களில் குடமுழுக்கு நடைபெற்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், மேலக்காவேரி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்
- ↑ கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயிலில் சப்தஸ்தான பல்லக்கு வெள்ளோட்டம், தினமணி, 8 பிப்ரவரி 2016
- ↑ ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் ஏழூர் பல்லக்கு பெருவிழா, மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி, தினமணி, 22 ஏப்ரல் 2016
- ↑ குடந்தை சோமேஸ்வரர், கைலாசநாதர் கோயில்களில் குடமுழுக்கு விழா, தினமணி, நவம்பர் 3, 2015