ராசிதீன் கலீபாக்கள்

முகமதுவிற்குப் பின் இசுலாமிய அரசை ஆட்சி செலுத்திய தலைவர்கள்
(ரசூத்தீன் கலிபாக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இராசிதுன் கலீபகமானது (ஆங்கிலம்: Rashidun Caliphate; அரபி: ٱلْخِلَافَةُ ٱلرَّاشِدَةُ) முதல் நான்கு தொடர்ச்சியான கலீபாக்களான (பொருள். "பின் வந்தவர்கள்") அபூபக்கர், உமறு, உதுமான், மற்றும் அலீ ஆகியோரை உள்ளடக்கியதாகும். இவர்கள் ஒட்டு மொத்தமாக இராசிதுன் அல்லது "நேர் வழி நடந்த" கலீபாக்கள் (الْخُلَفاءُ الرّاشِدُونَ, அல்-குலாபா அர்-ராசிதுன்) என்று அறியப்பட்டனர். இசுலாமிய இறை தூதர் முகம்மது நபியின் இறப்பிலிருந்து (பொ. ஊ. 632) உமையா கலீபகம் நிறுவப்படுவது வரை (பொ. ஊ. 661) முசுலிம் சமூகம் மற்றும் அரசியல் அமைப்பிற்கு இவர்கள் தலைமை தாங்கினர்.

இராசிதுன் கலீபகம்
ٱلْخِلَافَةُ ٱلرَّاشِدَةُ (அரபி)
அல்-கிலாபா அர்-ராசிதா
632–661
கொடி of இராசிதுன்
கொடி
உதுமானுக்குக் கீழ் அண். 654இல் அதன் உச்சபட்ச பரப்பளவின் போது இராசிதுன் கலீபகம்
உதுமானுக்குக் கீழ் அண். 654இல் அதன் உச்சபட்ச பரப்பளவின் போது இராசிதுன் கலீபகம்
தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)அரபு மொழி
பேசப்படும் மொழிகள்பல்வேறு வட்டார மொழிகள்[1]
சமயம்
இசுலாம்
கலீபா 
• 632–634
அபூபக்கர் (முதல்)
• 634–644
உமறு இப்னு அல்-கத்தாப்
• 644–656
உதுமான்
• 656–661
அலீ
வரலாறு 
• முகம்மதுவுக்குப்
பிந்தையோர்
632
633–654
• உமர்
கலீபாவாதல்
634
• உமரின் அரசியல்
கொலையும், உதுமான்
கலீபாவாதலும்
644
• உதுமானின் அரசியல்
கொலையும், அலீ
கலீபாவாதலும்
656
• அலீயின் அரசியல்
கொலை
661
• அல் ஹசன் முடி
துறந்ததற்குப் பிறகு
முதல் பித்னா
(உட்சண்டை) முடிவுக்கு
வருகிறது
661
பரப்பு
655[2]6,400,000 km2 (2,500,000 sq mi)
நாணயம்
  • திர்காம்
முந்தையது
பின்னையது
மதீனா அரசு
எராக்ளிய அரசமரபின் கீழ் பைசாந்தியப் பேரரசு
சாசானியப் பேரரசு
கசானித்து இராச்சியம்
உமையா கலீபகம்

சன்னி இசுலாமில் ஆழமாகப் பதிந்த நம்பிக்கையான[3] கலீபாக்கள் நேர் வழி நடந்தவர்களாகவும், அதிக இறையுணர்வு மற்றும் மெய்யறிவைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்,[4] இவர்களது சகாப்தம் ஒரு "பொற்காலம்", புனிதத் தன்மையிலும், நன்னெறி மற்றும் சமய நடத்தையை வழங்குவதில் இறை தூதர் முகம்மதுவின் வாழ்வுக்கு அடுத்த இடத்தில் இருந்தனர் என்பதிலிருந்தும் இந்த இராசிதுன் என்ற பட்டம் வருகிறது.[5][6] முசுலிம் வரலாற்றில் "மரபு வழி" அல்லது "ஆண் வழி மரபு" கலீபாக்கள் என்றும் கூட கலீபாக்கள் அறியப்பட்டனர்.[7] கலீபகத்தின் முதல் 25 ஆண்டுகளானவை துரிதமான இராணுவ விரிவாக்கத்தைத் தன் பண்பாகக் கொண்டிருந்தது. அக்காலத்தின் போது மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் மிக சக்தி வாய்ந்த பொருளாதார, பண்பாட்டு மற்றும் இராணுவ சக்தியாக இது உருவானது. 650கள் வாக்கில் அறபுத் தீபகற்பத்துடன் சேர்த்து வடக்கே லெவண்டில் இருந்து தென்காக்கேசியா வரையிலும், மேற்கே வடக்கு ஆப்பிரிக்காவில் எகிப்திலிருந்து தற்கால துனீசியாவின் விளிம்பு வரையிலும், கிழக்கே ஈரானியப் பீடபூமியிலிருந்து நடு மற்றும் தெற்காசியாவின் பகுதிகள் வரையிலும் இக்கலீபகமானது அடி பணிய வைத்தது. ஓர் ஐந்தாண்டு கால உட்சண்டை காரணமாக இக்கலீபகமானது முடிவுக்கு வந்தது.

சூன் 632இல் முகம்மதுவின் இறப்பைத் தொடர்ந்து அவருக்குப் பின் யார் ஆட்சி செய்ய வேண்டும் என முசுலிம் தலைவர்கள் விவாதித்தனர். பிந்தைய கலீபாக்களைப் போல் இல்லாமல் இராசிதுன் கலீபாக்கள் பொதுவாக இறை தூதரின் உயர் பதவியிலிருந்த தோழர்களின் ஒரு சிறு குழுவின் ஒரு வடிவத்தால் சுராவில் (பொருள்: கலந்தாய்வு)[a] தேர்ந்தெடுக்கப்பட்டனர் அல்லது அவர்களுக்கு முன் ஆட்சியில் இருந்த கலீபாவால் நியமிக்கப்பட்டனர்.[b] முகம்மதுவின் நெருங்கிய தோழரான பானு தய்ம் இனத்தின் அபூபக்கர் (. 632–634) மதீனாவில் முதல் கலீபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அறபுத் தீபகற்பத்தை வெல்லத் தொடங்கினார். அவரது இறப்பிற்குப் பிறகு பானு அதி இனத்தைச் சேர்ந்த அபூபக்கரால் நியமிக்கப்பட்டவரான உமறு (. 634–644) அடுத்த கலீபாவானார். உமறுக்குக் கீழ் கலீபகமானது அதற்கு முன்னர் இருந்திராத அளவு வேகத்தில் விரிவடைந்தது. பைசாந்தியப் பேரரசின் மூன்றில் இரு பங்குக்கும் அதிகமான பகுதியையும், சாசானியப் பேரரசின் கிட்டத்தட்ட முழுப் பகுதியையும் கைப்பற்றியது.

உமறுவின் அரசியல் கொலைக்குப் பிறகு பானு உமய்யா இனத்தின் ஓர் உறுப்பினரான உதுமான் (. 644–656) கலீபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 651இல் பாரசீகத்தை வெல்வதை இவர் முடித்து வைத்தார். பைசாந்திய நிலப்பரப்புகளுக்குள் போர்ப் பயணங்களைத் தொடர்ந்தார். சூன் 656இல் உதுமான் அரசியல் கொலை செய்யப்பட்டார். அவருக்குப் பின் பானு அசீம் இனத்தின் ஓர் உறுப்பினரான அலீ (. 656–661) கலீபாவானார். அலீ தலை நகரத்தை கூபாவுக்கு மாற்றினார். உதுமானின் உறவினரும், சிரியாவின் ஆளுநருமான முஆவியா இப்னு அபு சுபியானால் (. 661–680) அலீயின் தலைமை அங்கீகரிக்கப்படாததால் முதல் பித்னா என்று அழைக்கப்பட்ட உள்நாட்டுப் போருக்கு அலீ தலைமை தாங்கினார். உதுமானைக் கொன்றவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என முஆவியா நம்பினார். மேலும், அலீயின் முந்தைய ஆதரவாளர்களாக முன்னர் இருந்த கரிசியர்கள் என்று அறியப்பட்ட ஒரு மூன்றாவது பிரிவினர் சிபின் யுத்தத்தில் ஏற்பட்ட சமரசத்தை ஏற்க மறுத்ததற்குப் பிறகு அலீ மற்றும் முஆவியா ஆகிய இருவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். இப்போரானது ராசிதுன் கலீபகம் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கும், முஆவியாவால் 661இல் உமையா கலீபகம் நிறுவப்படுவதற்கும் வழி வகுத்தது.

சன்னி மற்றும் சியா முசுலிம்களுக்கு இடையிலான பிரிவையும் கூட இது நிரந்தரமாக்கியது. முகம்மதுவுக்குப் பிறகு முதல் முறையான கலீபா மற்றும் இமாமாக அலீ திகழ்ந்தார் என சியா முசுலிம்கள் நம்பினர். முகம்மதுவுடனான அவரது இரத்த சொந்தத்திற்கு ஆதரவளித்தனர்.[10]

வரலாறு

தொகு

முகம்மது நபியின் மறைவுக்கு பிறகு, அவரது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை யார் ஆளுவது என்ற கேள்வி எழுந்தது. அப்பொழுது ஒரு சாரார் முகம்மதின் நண்பரும், மாமனாருமான அபூபக்கரை ஆதரித்தனர். மற்றொரு சாரார் மதீனா வாசிகளை ஆதரித்தனர். இவ்வாறான ஒரு சிறிய சர்ச்சைக்கு பிறகு அபூபக்கர்(ரலி) அடுத்த கலிபாவாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆட்சிக்குப்பிறகு உமர்(ரலி), உதுமான்(ரலி)கடைசியாக அலி(ரலி)ஆகியோர் வரிசையாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் அபூபக்கர்(ரலி) தன்னை கலிஃபத்துல் ரசூல் அதாவது இறைத்தூதரின் பிரதிநிதி என அழைத்துக்கொண்டார். இவருக்குப்பின் வந்த உமர்(ரலி) தன்னை அமீருல் முஃமினீன் (முசுலிம்களின் தலைவர்) என அழைத்துக்கொண்டார். இவருக்கு பின்பு வந்த உதுமான்(ரலி) மற்றும் அலி(ரலி)ஆகியோரும் தங்களை அமீருல் முக்மினீன் என்றே அழைத்துக்கொண்டனர்.

அபூபக்கர்(ரலி)

தொகு

அபூபக்கர்(ரலி) ராசிதுன் கலீபாக்களில் முதலாமானவர். இவர் 632 முதல் 634 வரை ஆகிய இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்தில் பைசாந்தியப் பேரரசு முறியடிக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே தோன்றிய பொய்த்தூதர்களும் முறியடிக்கப்பட்டனர். மேலும் முகம்மது நபியின் ஹதீஸ்கள் தொகுக்கும் பணியும் இவரது ஆட்சிக்காலத்திலேயே தொடங்கப்பட்டது. 634 ஆம் ஆண்டு இறந்த இவர், தனக்குப்பிறகு உமரை அடுத்த கலிபாவாக நியமித்தார்.

உமர்(ரலி)

தொகு

உமர்(ரலி) ராசிதுன் கலிபாக்கலில் இரண்டாமானவர் ஆவார். இவர் 634 முதல் 644 வரை ஆட்சி செய்தார். இவரது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர்பெற்ற இவரது ஆட்சி காலத்தில் மெசபடொமியா, பாரசீகம், எகிப்து, பாலத்தீனம், சிரியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆர்மீனியா ஆகிய பகுதிகள் வசப்படுத்தப்பட்டன. 634 ஆம் ஆண்டு மரணமடைந்த இவர் 6 நபர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அதனிடம் தங்களுக்குள் தனக்குப்பின் கலிபாவாக ஒருவரை தேர்ந்தெடுத்துக்கொள்ள பணித்தார்கள். மேலும் 3 நாட்கள் இதற்கு அவகாசமும் கொடுத்தார். இவ்வாறு உதுமான்(ரலி) அடுத்த கலிபாவாக அந்த குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

உதுமான்(ரலி)

தொகு

உதுமான்(ரலி) ராசிதுன் கலீபாக்கலில் மூன்றாமானவர் ஆவார். இவர் 644 முதல் 656 வரை ஆட்சி செய்தார். மிகவும் மென்மையானவரும், அதிக கூச்சசுபாவமும் கொண்ட இவரின் ஆட்சியில் இரான், வடக்கு ஆப்பிரிக்கா, சிரியா மற்றும் சைப்பிரசு ஆகிய கைப்பற்றப்பட்டன. இவரது ஆட்சி காலத்தில்தான் இசுலாமிய ராணுவத்தில் கடற்படை உருவாக்கப்பட்டது. மேலும் திருக்குர்ஆன் தொகுக்கப்பட்டு இசுலாமிய ஆட்சி நடைபெற்ற அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்பட்டது.

பொதுவாக இவர் தனக்கு வேண்டப்பட்ட மற்றும் உறவினர்களை ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகளாக நியமிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இவரது ஆட்சியில் ஏற்பட்டது. இதன் காரணமாக இவருக்கு எதிரான கிளர்ச்சிப்படை எகிப்து மற்றும் கூபா ஆகிய பகுதிகளில் உருவானது. இவர்களால் உதுமான்(ரலி) அவர்கள் 656 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

அலி(ரலி)

தொகு

அலி(ரலி) ராசிதுன் கலீபாக்கலில் நான்காவது மற்றும் இறுதி கலிபா ஆவார். இவர் 656 முதல் 661 வரை ஆட்சி செய்தார். உதுமானின் படுகொலைக்குப்பிறகு மதீனா நகரமே ஒருவிதமான பதட்டமான நிலையிலேயே இருந்தது. இதை தொடர்ந்து பலர் அலி(ரலி) அவர்களை அடுத்த கலிபாவாக பொறுப்பேற்குமாறு வற்புறுத்தினர். இதை ஏற்று பொறுப்பேற்ற அலி(ரலி) தனது தலைநகரை மதீனாவிலிருந்து, கூபாவிற்கு மாற்றினார். மேலும் பல ஆளுநர்களை (உதுமானின் உறவினர்கள்) பணியிறக்கம் செய்துவிட்டு புதியவர்களை நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிரியாவின் ஆளுநர் முஆவியா என்பவர், அலிக்கு எதிராக படையெடுப்பு நடத்தினார். இந்த உள்நாட்டு போர்களினால் 'காரிச்சியாக்கள்' எனப்படும் கூட்டத்தாரின் பகையை சம்பாதித்துக்கொண்டார். பின்பு இந்த கூட்டத்தாரால் 661-ம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார்.

ராசிதுன் கலிபாக்களின் ஆட்சி மாற்றம்

தொகு

நயவஞ்சகர்களின் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட அலியின் படுகொலைக்குப்பிறகு அவரது மகன் அசன் (ஹசன்) என்பவரை ஒரு பிரிவினர் அடுத்த கலிபாவாக அறிவித்தனர். இதனை ஏற்காத முஆவியா அசனை முறியடித்துவிட்டு தன்னயே அடுத்த கலிபாவாக அறிவித்துக்கொண்டார். இவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அரசே உமய்யா கலிபாக்கள் ஆட்சி என அழைக்கப்படுகின்றது.

ராசிதுன் கலீபாக்கலின் ஆட்சி அன்றைய காலகட்டத்தில் மிகவும் சக்தி வாய்ந்த அரசாட்சியாக இருந்தது. இவர்களின் படை பைசாந்தியம், பாரசீகம் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் இருந்த பல பேரரசுகளை வெற்றிக்கொண்டது. இவர்களது ஆட்சியின் கீழ் மத்திய கிழக்கு, ஈரான், சிரியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகள் ஆகிய அனைத்தும் வந்தன.

இசுலாமியப் பார்வை

தொகு

சன்னி இசுலாம்

தொகு

சன்னி இசுலாமைப் பொறுத்தவரை, அது ராசிதுன் கலீபாக்களை முழுமையாக ஆதரிக்கின்றது. இவர்கள் முகம்மது நபியின் வழிமுறைகளின்படியே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் நம்புகின்றது. மேலும் இந்த நால்வரில் அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகிய இருவரின் மகள்களை முகம்மது நபி(சல்)திருமணம் செய்திருக்கிறார். மேலும் உதுமான்(ரலி)மற்றும் அலி(ரலி)ஆகிய இருவருக்கு தனது மகள்களை திருமணம் செய்துகொடுத்திருக்கிறார். மேலும் தன் வாழ்நாளில் பல நேரங்களில் தனது தோழர்களை மற்றவர்கள் திட்டுவதை விட்டு விலகுமாறு பணித்திருக்கிறார். இன்னும் இந்த நான்கு நபித் தோழர்களும் முகம்மது நபியின் வாயினால் சொர்க்கத்திற்கான நற்செய்தி பெற்றவர்கள். எனவேதான் இவர்களை நேர்வழி பெற்ற கலீபாக்கள் என அழைக்கின்றனர்.

சீஆ இசுலாம்

தொகு

சீஆ இசுலாத்தை பொறுத்தவரை, முதல் மூன்று கலீபாக்களை இவர்கள் ஏற்பதில்லை. அலி அவர்களையே முதல் கலீபாவாக ஏற்றுக்கொள்ளும் இவர்கள், அலி அவர்களுக்குப் பிறகு அவரது மகன்களான ஃகசன், ஃகூசேன் ஆகியோரையும் பின்னர் அவர்களின் வழி வந்த தலைவர்களைக் கொண்ட வரிசையை இமாம்கள் என்று அழைக்கின்றனர்.

சீஆக்களின் ஒரு பிரிவான இசுனா அசரிய்யா பிரிவு பன்னிரு இமாம்களைப் பின்பற்றுகிறது. இது இன்றையா ஈரான், எகிப்து, சிரியா, குவைத், ஈராக், ஆப்கானித்தான், பாக்கித்தான், இந்தியா முதலான நாடுகளில் பின்பற்றப்படுகிறது. சைதிய்யா பிரிவு பெரும்பாலும் யெமன் நாட்டில் காணப்படுகிறது. சீஆக்களின் மற்றைய பிரிவுகளான கோச்சாக்கள், போஃராக்கள் முதலானோர் பல்வேறு நாடுகளிலும் விரவிக் காணப்படுகின்றனர்.

காலக்கோடு

தொகு
அலிஉதுமான்உமர்அபூபக்கர்

குறிப்புகள்

தொகு
  1. Abu Bakr, Uthman and Ali were chosen this way[8]
  2. Abu Bakr appointed Umar as his successor before dying in 634 AD.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. Versteegh, Kees (2014). The Arabic Language. Edinburgh University Press. pp. 126–132. ISBN 978-0-7486-4529-9.
  2. Rein Taagepera (September 1997). "Expansion and Contraction Patterns of Large Polities: Context for Russia". International Studies Quarterly 41 (3): 495. doi:10.1111/0020-8833.00053. http://www.escholarship.org/uc/item/3cn68807. 
  3. Chamieh 1977, ப. 41.
  4. Chamieh 1977, ப. 39.
  5. Lewis 1995, ப. 62.
  6. (Melchert 2020, ப. 63, cf. p. 72 note 1)
  7. "Rashidun". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 
  8. "Shūrā". Encyclopaedia of Islam (2nd). (1960–2007). DOI:10.1163/1573-3912_islam_COM_1063. 
  9. "The Biography of Abu Bakr As-Siddeeq". archive.org. 2007.
  10. Triana, María (2017). Managing Diversity in Organisations: A Global Perspective. Taylor & Francis. p. 159. ISBN 9781317423683.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசிதீன்_கலீபாக்கள்&oldid=4255572" இலிருந்து மீள்விக்கப்பட்டது