ராத் வான் ஜஸ்டிஸ்

ராத் வான் ஜஸ்டிஸ் என்பது ஒல்லாந்தர் கால உயர் நீதிமன்றமாகும். இலங்கையில் கொழும்பு, யாழ்ப்பாணம், காலி ஆகிய இடங்களில் ஒல்லாந்தர் காலத்தில் ராத் வான் ஜஸ்டிஸ் என்ற பெரிய நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. இங்கு பாரதூரமான குற்ற வழக்குச்செயல்கள் பற்றி விசாரணை செய்யப்பட்டன. இவை தவிர மற்றைய நீதிமன்றங்களிலிருந்து வரும் வழக்குகளும் இங்கே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராத்_வான்_ஜஸ்டிஸ்&oldid=1989503" இலிருந்து மீள்விக்கப்பட்டது