ராவுத்த குமாரசாமி

ராவுத்த குமாரசாமி கொங்கு நாட்டில் வாழும் கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தின் கண்ணன் கூட்டத்தாரின் குல தெய்வங்களில் ஒன்று. இவருக்கான கோயில் தமிழ்நாட்டின் கொங்கு நாட்டின், சிவகிரியை அருகில் காகம் என்னும் கிராமத்தில் உள்ளது. ராவுத்த குமாரசாமியை கொங்கு வேளாளரில் "கண்ணன்" கூட்டத்தினர் குலதெய்வமாக வழிபட்டுவருகின்றனர். ராவுத்தர்கள் என்பவர்கள் ஒரு தமிழ் நாட்டின் முசுலிம்களிலேயே உயரடுக்கு முசுலிம்கள் ஆவார், குதிரை வீரர்களான இவர்கள் ஒரு காலத்தில் இந்து கொங்கு வெள்ளாளர் கவுண்டர் இனத்தின் கண்ணன் கூட்டத்தாரின் மூதாதையர்கள் ஓரு பெரும் சங்கடத்தில் இருந்தபோது, குதிரை வீரர்களான ராவுத்தர்கள் அவர்களை பாதுகாப்பாத்தினர், அவர்களின் குலம் தழைக்க உதவியவர்கள். இதனாலேயே இவரை குமாரசாமிக்கும் தங்களுக்கும் காவல் தெய்வமாகவும், குமாரசாமியை (முருகப்பெருமான் அவதாரம்) குலசாமியாகவும் இம்மக்கள் வணங்குகின்றனர்.

கோயில் வரலாறு தொகு

சில ஆண்டுகளுக்கு முன்புவரை 890 ஆண்டுகளாக வயல்வெளியில் கூரைக்கடியில் சுதையில் அமைக்கப்பட்டு இருந்த ராவுத்த குமாரசாமி சிலைகளுக்கு ஆகம முறைப்படி கோயில் கட்ட கொங்கு வெள்ளாள கண்ணன் கூட்டத்தார் விரும்பினர். அவர்கள் குல குருக்கள், சிவாச்சார்யார்கள், ஸ்தபதிகள் மற்றும் முன்னோர்கள் ஆலோசனைப்படி முக்கிய மூர்த்தியான குமாரசாமியாகிய முருகப்பெருமானுக்கு கற்சிலை அமைக்கப்பட்டது.அபிஷேக மூர்த்தியான ராவுத்தகுமாரசாமிக்கு பின் உள்ள ராவுத்தர் சாமிகளுக்கு வேங்கை மரத்தால் சிலைகள் செய்யப்பட்டட்டு வழிபடப்படுகிறது. கருவரையின் முன்பகுதியில் இருபுறமும் சித்தர்கள் யோக நிலையில் வீற்றிருக்கின்றனர். இவர்களது பெண் தெய்வமாக வீரமாத்தி அம்மன் சிலையும், முன்னோர் சிலைகளும் ராவுத்த குமாரசுவாமி கோவிலின் வடபுறம் மற்றொரு பெரிய விமானத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது. விநாயகப்பெருமான் , சப்த கன்னிமார்கள், தனித்தனி சந்நிதிகள் கோவில் உட்பகுதியில் உள்ளது. கோவிலின் வெளிப்பகுதியில் கருப்பணசுவாமிகளுக்கும் தனியாக சந்நிதி உள்ளது. ராவுத்த குமாரசாமி கோயிலானது குமாரசுவாமிக்கு மிகப்பெரிய விமானம் அமைப்புடனும், ராவுத்தருக்கு மினாரா போன்றும் என்று வித்தியாசமான அமைப்பைக் கொண்டுள்ளது. கோயிலின் முன்புற வாயிலில் வாளை உயர்த்திப் பிடித்து அமர்ந்தவாறும், பச்சைத்துலுக்க ராவுத்தர் வாயில் சுருட்டுடன் கைலி உடுத்தி ஒருக்களித்துப் படுத்தவாறும் என வெவ்வேறு நிலைகளில் ராவுத்தர் சிலைகள் காணப்படுகின்றன. கருவறையில் குமாரசாமியான முருகப்பெருமானுக்கு பின்னால், காவல் தெய்வமாக பீடத்தில் வாளை உயர்த்திப் பிடித்தவண்ணம், ஒரு கால் தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் இரு ராவுத்தர்கள் உள்ளனர்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. கோம்பை எஸ்.அன்வர் (21 சூன் 2018). "ராவுத்த குமாரசாமி: தமிழ் சகோதரத்துவத்தின் இன்னொரு அடையாளம்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராவுத்த_குமாரசாமி&oldid=3578155" இலிருந்து மீள்விக்கப்பட்டது