வராகி மாலை

தமிழ் நூல்

வராகி மாலை என்னும் நூல் வீரை கவிராச பண்டிதர் என்பவரால் இயற்றப்பட்டது. காலம் 16-ஆம் நூற்றாண்டு.

சிவனின் பாகம் சக்தி. சக்தியை ஏழு கூறுகளாகப் பகுத்துப் பார்ப்பது உண்டு.

  • அபிராமி, நாராயணி, இந்திராணி, கௌமாரி, வாராகி, துர்க்கை, காளி

இவர்களில் வாராகி என்பவளை இந்த நூல் வராகி என்கிறது.
வராகி உடலுக்கு ஆற்றல் தரும் தெய்வம்.

இந்த நூலில் 32 கட்டளைக்கலித்துறைப் பாடல்கள் உள்ளன.

  • பகைவனை அழிக்கும் உத்திகளான வசியம், தம்பனம், மோகனம், ஆகருடணம், உச்சாடனம் போன்றவற்றிற்கு இதில் பாடல்கள் உள்ளன.

பகைவனுக்குக் கொடுமையான தண்டனை வழங்குக எனக் கேட்டுக்கொள்ளும் 10 பாடல்கள் இதில் பிற்காலத்தில் மேலும் சேர்க்கப்பட்டுள்ளன.

பாடல்கள் சிறந்த நடையில் அமைந்துள்ளன.

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=வராகி_மாலை&oldid=3755442" இலிருந்து மீள்விக்கப்பட்டது