வலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/1

குமார் பொன்னம்பலம்

குமார் பொன்னம்பலம் ஒர் தமிழ் வக்கீலும் அரசியல்வாதியும் ஆவர். இவர் ஜி. ஜி. பொன்னம்பலத்தின் மகனாவர். சந்திரிகா குமாரத்துங்கவிற்கு எதிரான தற்கொலைத்தாக்குதலை அடுத்து இவர் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது மகன் இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். நாடாளுமன்ற அரசியலில் இவருக்கு வெற்றிகள் கிட்டாவிட்டாலும், அதற்கு வெளியே இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டார். அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் சார்பில் நீதிமன்றங்களில் வாதாடினார். எவ்விடத்திலும், தமிழ் மக்களுக்குச் சார்பான கருத்துக்களைத் துணிவாக வெளியிட்டு வந்தார். இதனால், இனவாதிகள் இவரை வெறுத்தனர். இதன் உச்சக் கட்டமாக அவர்களால் குமார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் இறந்தபோது, விடுதலைப் புலிகள் இவருக்கு மாமனிதர் என்னும் விருது வழங்கிக் கௌரவித்தனர்.