வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/20

சிறப்புப் படம்





சங்கிலித்தோப்பு இலங்கையின் வடபகுதியில் அமைந்திருந்த யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த இடம். யாழ்ப்பாண நகரில் இருந்து இரண்டு மைல் தொலைவில் நல்லூரில் அமைந்துள்ளது. தற்காலத்தில் பல்வேறு பயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுவிட்ட இந் நிலப் பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்துக்கான குறியீடுகளாக இருப்பவை, சங்கிலித்தோப்பு வளைவு எனக் குறிப்பிடப்படுகின்ற கட்டிடமொன்றின் வாயில் வளைவும், யமுனா ஏரி எனப்படும் பகர வடிவக் கேணியொன்றும் ஆகும்.
படிம உதவி: