வலைவாசல்:வரலாறு


[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


வரலாறு



வரலாறு என்ற சொல் இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது. ஒரு கற்கைத் துறையைக் குறிக்கும் போது, பதிவுசெய்யப்பட்ட மனித சமுதாயங்களின் கடந்தகாலமான, மனிதவரலாற்றையே குறிக்கின்றது. வரலாற்றறிஞர்கள், எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பதிவுகள், நேர்காணல் (வாய்மொழி வரலாறு), மற்றும் தொல்பொருளியல் உள்ளிட்ட பலவகையான மூலங்களைப் பயன்படுத்துகிறார்கள். மனிதனால் பதிவு செய்யப்படுவதற்கு முன் நிகழ்ந்தவை வரலாற்றுக்கு முற்பட்டவை எனப்படுகின்றன.


சிறப்புக் கட்டுரை



சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில் மாமல்லபுர கடற்கரையில் சில ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கற்றளியாகும். இந்தக் கோவில் 2005 ஆம் ஆண்டில் தோண்டி எடுக்கப்பட்டது. இக்கோவில் கட்டுமானம் இரண்டு விதமாக அமைந்துள்ளதாக அகழ்வாய்வாளர்கள் நம்புகின்றனர். முதலாவது சங்க காலத்திய (கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை) செங்கல் கட்டுமானம் என்றும் இரண்டாவது இச்செங்கல் கட்டுமானத்திற்கு மேல் கட்டப்பட்ட பல்லவ காலத்திய (கிபி 8 ஆம் நூற்றாண்டுக்குப் பின்) கருங்கல் கட்டுமானம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இவ்வகழ்வாய்வை மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் ஆய்வக ஆய்வாளர்கள் தமிழ்நாட்டில் அகழ்வாய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட இவ்வகையைச் சேர்ந்த கட்டிடங்களிலேயே மிகவும் பழமையானது இச்செங்கல் கட்டுமானம்தான் என்கின்றனர்.பெரும்பாலான இந்துக் கோவில்களைப் போல் அல்லாமல் இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவில்தான் முருகக் கடவுளுக்குரிய கோவில்களிலேயே பழமையானது.இந்தியப் பெருங்கடல் சுனாமியால் வெளிப்பட்ட ஒரு பாறையில் காணப்பட்டக் கல்வெட்டுக் குறிப்புகளால் இந்தியத் தொல்லியல் ஆய்வக ஆய்வாளர்கள் இக்கோவிலைக் கண்டுபிடித்தனர்.
[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


நீங்களும் பங்களிக்கலாம்



நீங்களும் பங்களிக்கலாம்
  • வரலாறு தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|வரலாறு}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • வரலாறு தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • வரலாறு தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • வரலாறு தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • வரலாறு தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


விக்கித்திட்டங்கள்



தாய்த் திட்டம்
விக்கித் திட்டம் வரலாறு
விக்கித்திட்டம்
துனைத் திட்டம்
விக்கித் திட்டம் நாடுகள்



சிறப்புப் படம்





மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர் திப்பு சுல்தான். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூர் பேரரசை ஆண்ட இவர் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியுடன் பல முறைப் போரிட்டவர். ஆர்த்தர் வெல்லஸ்லியின் தலைமையிலான ஆங்கிலப் படைகளுடன் நடைபெற்ற நான்காவது ஆங்கிலேய மைசூர்ப் போரில் திப்பு மரணமடைந்தார். படத்தில் காணப்படும் ஓவியம் 1800ம் ஆண்டு என்றி சிங்கில்டன் என்பவரால் வரையப்பட்டது. இதில் போரிட்டு மடியும் திப்புவின் இறுதி நிமிடங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
படிம உதவி: ஓவியம்:சிங்கில்டன்
[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


செய்திகள்




தொடர்புடைய வலைவாசல்கள்



தமிழ்நாடுதமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்தமிழ்
தமிழ்
இந்தியாஇந்தியா
இந்தியா
இலங்கைஇலங்கை
இலங்கை
தமிழீழம்தமிழீழம்
தமிழீழம்
தமிழ்நாடு தமிழ் இந்தியா இலங்கை தமிழீழம்
[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:வரலாறு&oldid=3433679" இலிருந்து மீள்விக்கப்பட்டது