வலைவாசல்:வைணவம்/சிறப்புக் கட்டுரை/5

சக்ராயுதம்

இந்து தொன்மவியலின் அடிப்படியில் சக்ராயுதம் என்பது விஷ்ணுவின் ஆயுதமாகும். இந்த ஆயுதத்தினை சக்கரத்தாழ்வார் என வடிவமிட்டு வைணவர்கள் வணங்குகிறார்கள். சுதரிசனம்,சுதர்சனம் என பல பெயர்களில் இவ்வாயுதம் வழங்கப்படுகிறது.சிவபெருமானை திருவீழிமிழலை தலத்தில் விஷ்ணு ஆயிரம் தாமரைப் பூக்களை கொண்டு தினம் அர்ச்சனை செய்து வந்தார். ஒருநாள் ஆயிரம் தாமரைப் பூக்களில் ஒன்று குறைந்தது காணப்பட்டது. அதனை அர்ச்சனையின் போது அறிந்த விஷ்ணு தன் கண்களில் ஒன்றினை தாமரையாக்கி ஆயிரம்பூவாக முழுமையான பூஜை செய்தார். அதனால் சிவபெருமான் மகிழ்ந்து சக்ராயுதத்தினை விஷ்ணுவிக்கு வழங்கினார் என்று திருவீழிமிழலை தலபுராணம் கூறுகிறது.