வழிகாட்டி (1958 இலங்கை சிற்றிதழ்)

வழிகாட்டி இலங்கை, கொழும்பிலிருந்து 1958ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். வழிகாட்டி எனும் பெயரில் இலங்கை, இந்தியா, மலேசியாவில் பல இதழ்கள் காலத்துக்குக் காலம் வெளிவந்துள்ளன. குறிப்பாக இசுலாமிய அடிப்படை விடயங்களுக்கான வழிகாட்டி என்ற வகையிலே இவை அமைந்திருந்தன.

ஆசிரியர் தொகு

  • மௌலவி பாசில் யூ.எம். தாஸீன் நத்வி.

பணிக்கூற்று தொகு

இஸ்லாமிய இலட்சிய மாத இதழ்

உள்ளடக்கம் தொகு

இசுலாமிய அடிப்படைக் கருத்துக்களுக்கும், இசுலாமிய உலக செய்திகளுக்கும் உட்பட்ட செய்திகளை இது தன்னகத்தே கொண்டிருந்தது. இடைக்கிடையே ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றன.

ஆதாரம் தொகு

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்