வாணியாறு அணை

வாணியாறு அணை, என்பது தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள ஒரு அணையாகும்.[1] இது தருமபுரி மாவட்டத்தில் வாணியாற்றின் குறுக்கே முள்ளிக்காடு என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இது வெங்கடசமுத்திரம் என்ற ஊரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த அணை 1985இல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 418 மில்லியன் கன அடிகள் (11.78 மில்லியன் கன மீட்டர்)[2] நீர்பாசனம் பெறும் பாசனப்பரப்பு 10,517 ஏக்கர் நிலமாகும்.[3] இதன் ஆழம் 65 அடியாகும்[4]

வாணியாறு அணை

குறிப்புகள் தொகு

  1. எஸ். ராஜா செல்வம் (10 சூன் 2019). "பருவமழையால் நடப்பு ஆண்டில் அணைகள் முழுமையாக நிரம்புமா? தரும்புரி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு". செயத்தி. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2019.
  2. http://www.wrd.tn.gov.in/Reservoir_details.pdf
  3. தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 481
  4. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/vaniyar-dam-full-to-the-brim/article922972.ece

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணியாறு_அணை&oldid=3578230" இலிருந்து மீள்விக்கப்பட்டது