விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 4, 2012

{{{texttitle}}}

இயேசு கிறித்து எருசலேம் நகருக்குள் ஆடம்பரமாக நுழைந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா குருத்தோலைத் திருவிழா. இயேசு சாவினின்று உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய ஞாயிறு இது நிகழும். நற்செய்தி நூல்கள் தரும் தகவல்படி, இயேசு தாம் துன்புற்று இறப்பதற்கு ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு முன்னால் எருசலேம் நகருக்குள் கழுதை மீதேறி மிகுந்த மாட்சிமையோடு நுழைந்தார். அவர் சென்ற வழியில் மக்கள் தங்கள் மேலுடைகளை விரித்தார்கள்; வேறு சிலர் இலைதழைகளைப் பரப்பினார்கள். இந்த ஓவியம் 1900களில் வரையப்பட்டது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்