விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 23, 2011

{{{texttitle}}}

அங்குலிமாலா என்பவன் பீகாரில் புத்தரின் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு கொடிய திருடன். இவன் 999 பேரைக் கொன்று ஆயிரமாவது ஆளுக்காகக் காத்திருந்த வேளையில் அங்குலிமாலாவின் வயதான தாய் மகனைத் தேடி வருவதையும் அதே வேளையில் புத்தர் எதிர்ப்படுவதையும் படம் காட்டுகிறது. புத்தர் அவனை மனமாற்றமடையச் செய்து தனது சங்கத்தில் சேர்த்துக் கொண்டார். துறவி அங்குலிமாலா வெளியே சென்ற போது மக்கள் அவரைக் கல்லால் அடித்து துன்புறுத்தினர். ஒரு நாள் மாடு ஒன்று முட்டி துறவி அங்குலிமாலா கொல்லப்பட்டார். அங்குலிமாலாவின் முடிவு மனிதர்கள் தங்கள் கருமவினையிலிருந்து எவ்வேளையிலும் எவ்வழியிலும் தப்ப முடியாது என்பதை விளக்குவதாய் அமைகிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்