விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 6, 2013

கதைகூறல் என்பது, நிகழ்வுகளைச் சொற்கள், படங்கள், ஒலிகள் என்பவற்றின் மூலம் இன்னொருவருக்குச் வெளிப்படுத்துவது ஆகும். பெரும்பாலும் கதைகளைக் குறித்த நேரத் தேவைக்குப் பொருத்தமான உத்திகளுடனும், அலங்காரங்களுடனும் கூறுவது வழக்கம். பொழுதுபோக்குக்காகவும், கல்வி, பண்பாட்டுக் காப்பு, ஒழுக்க நெறிகளை உணர்த்துதல் போன்ற தேவைகளுக்காகவும் கதைகளைப் பரிமாறிக் கொள்வது எல்லாப் பண்பாடுகளிலும் காணப்படுகின்றது. இளம் வால்ட்டர் ராலேக்கும் அவரது சகோதரருக்கும், கடலில் நிகழ்ந்தவை பற்றி ஒரு கடலோடி கதைகூறும் காட்சி படத்தில் காட்டப்பட்டுள்ளது. 1870 இல் சர் யோன் எவரெட் மிலாயிசு வரைந்த ராலேயின் இளம் பருவம் எண்ணெய் வண்ண ஓவியம்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்