விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 18, 2011

{{{texttitle}}}

வின்சென்ட் வான் கோ ஒரு புகழ் பெற்ற டச்சு ஓவியர். பின்-உணர்வுப்பதிவுவாத பாணியிலான இவரது ஓவியங்கள் இவர் உயிருடன் இருந்த காலத்தில் புகழ்பெறவில்லை. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை படைத்த வான் கோ, தனது வாழ்நாளின் பெரும்பகுதி வறுமையில் உழன்றார். மனநிலை பாதிக்கப்பட்டு தனது 37வது வயதில் தற்கொலை செய்து கொண்டார். பிரகாசமான நிறங்களும் ஆழ்ந்த உணர்வுத் தாக்கமும் கொண்ட இவரது ஓவியங்கள் 20ம் நூற்றாண்டு ஓவியக் கலை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இன்று உலகில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இடப்புறம் உள்ள படம் வான் கோ தன்னைத் தானே வரைந்த ஓவியங்களுள் ஒன்று.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்