விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 01, 2010

{{{texttitle}}}

தேரை அனுரா வரிசையின் பலவகை நிலநீர் வாழிகளின் இனங்களைக் குறிக்கும். வறண்ட சூழலிலும் வாழக்கூடிய வகையிலான தேரைகளின் உருவைக் கொண்டு இவை தவளைகளிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றன. கல்லினுள் தேரைக்கும் உணவு வழங்கும் இறைவனைக் குறித்த பாடல் இவை வாழும் சூழலை எடுத்துச் சொல்வதாக உள்ளது. இவற்றின் தோல் நீரைத் தேக்கிக் கொள்ளும் விதமாகத் தடித்துக் காணப்படுகிறது. மேலும் வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளப் பழுப்பு நிறத்தைக் கொண்டுள்ளது. அவற்றின் தோலில் பருக்கள் போன்ற வெளியுடல் சுரப்பிகள் உள்ளன. மேலும் தாவுகின்ற தவளைகள் போலன்றி இவை கால்களைக் கொண்டு நடக்கின்றன. குளிர்காலங்களில் தங்கள் தோலைப் பாதுகாக்க வளைகளில் பதுங்குகின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்