விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 19, 2014
- வாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் நாள்தோறும் கங்கை ஆற்றுக்கு ஆரத்தி வழிபாடு (படம்) நடத்தப்படுகிறது.
- வெறுங்கல்லறை என்பது உடலை அடக்கம் செய்யாது, ஒருவர் அல்லது ஒரு குழுவினரின் ஞாபகக்குறியாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும்.
- சிறைகளின் நிலையை மேம்படுத்தப் பாடுப்பட்ட எலிசபெத் ஃபிரை “சிறைகளின் தேவதை” என்றழைக்கப்பட்டார்.
- சதுரங்கத் திறப்புக்களில் ஒரு ஆட்டக்காரர், தனக்கு ஒரு சாதகமான நிலையை கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் தனது காய் ஒன்றைப் பலியிடுதல் பலியாட்டம் எனப்படும்.
- கல்வெட்டுகளின் இறுதிப் பகுதியின் ஒரு பிரிவு ஓம்படைக்கிளவி என்றழைக்கப்படுகிறது.