விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 9, 2011
- கலாசேத்திராவின் நிறுவனரான ருக்மிணி தேவி அருண்டேல் (படம்) கலைச்சேவையே தன் வாழ்க்கைப்பணி என்று கூறி இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்கும் வாய்ப்பை ஏற்கவில்லை.
- புகழ் பெற்ற ஓவியர் வின்சென்ட் வான் கோவால் தன் வாழ்நாளில் தனது ஒரே ஒரு ஓவியத்தைத் தான் விற்க முடிந்தது.
- ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தில் 7 எலும்புகள் தான் உள்ளன. சுண்டெலி, மனிதன் உள்ளிட்ட எல்லாப் பாலூட்டிகளும் ஏழு கழுத்தெலும்புகளை உடையவையே!
- 1922-35 காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்ட சுயாட்சிக் கட்சி, இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து உருவான கட்சியாகும். காலப்போக்கில் காங்கிரசின் தேர்தல் அரசியல் பிரிவாகச் செயல்படத் தொடங்கி அதனுடன் மீண்டும் இணைந்து விட்டது.
- உலகின் மிகப்பழமையான வானளாவி நகர் என்றழைக்கப்படும் நகரம் ஏமனிலுள்ள சிபாம் நகரம் ஆகும்.