விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 28, 2021

தங்க நாடோடிக் கூட்டம் என்பது மங்கோலியாவில் தோன்றி பின் துருக்கிய மயமாக்கப்பட்ட 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கானேடாகும். இது கிப்சாக் கானேடு என்றும் சூச்சியின் உளூஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாடு 1255 இல் படு கானின் மறைவுக்குப் பின் 1359 வரை தழைத்தோங்கியது. இதன் இராணுவமானது இசுலாமைத் தழுவிய உசுபெக் கானின் (1312–1341) காலத்தில் வலிமையுடன் விளங்கியது. மேலும்...


பாபிலோன் தற்கால ஈராக் நாட்டின் கீழ் மெசொப்பொத்தேமியாவில் பாயும் யூப்ரடீஸ் ஆற்றின் இடது மற்றும் வலது கரையில், தற்கால ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்திற்கு தெற்கே 100 கிலோ மீட்டர் தெற்கே, கி.மு. 1800 முதல் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முடிய செழித்திருந்த பண்டைய நகரம் ஆகும். கி.மு. 19 ஆம் நூற்றாண்டில், முதல் பாபிலோனியாவின் முதல் வம்சத்தவர்களின் நகர அரசாக பாபிலோன் நகரம் விளங்கியது. மேலும்...