விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 27, 2016

இலாகூர் கோட்டை என்பது பாக்கித்தானின் பஞ்சாபிலுள்ள லாகூர் நகரில் உள்ள கோட்டை ஆகும். அரண் சூழ் இலாகூர் நகரின் வடமேற்கே இக்பால் பூங்காவில் அமைந்துள்ளது. பாக்கித்தானிலேயே முகப்பெரும் நகரியப் பகுதி பூங்காவாக விளங்கும் இக்பால் பூங்கா 20 எக்டேர் பரப்பளவில் சரிவக வடிவில் அமைந்துள்ளது. இந்தக் கோட்டையின் அடித்தளங்கள் மிகத் தொன்மையானதாக இருந்தாலும் தற்போது காணப்படும் கோட்டை பெரும்பாலும் முகலாயப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. 1556–1605 காலகட்டத்தில் அக்பர் ஆட்சியில் பெரிதும் கட்டமைக்கப்பட்டது. தொடர்ந்து வந்த முகலாயப் பேரரசர்கள் இங்கிருந்து ஆண்டு வந்தனர். முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு சீக்கிய, பிரித்தானிய ஆட்சியாளர்களின் பாற்சென்றது. மேலும்...


மாசற்ற கருத்தரித்தல் பேராலயம் என்பது மாஸ்கோ உரோமன் கத்தோலிக்க உயர்மறை மாவட்டத்தின் பேராலயமாகவும் புதிய கோதிக் கிறித்தவ தேவாலயமாகவும் உள்ளது. இரசியாவின் மைய ஆட்சி ஒக்ருக் அல்லது மாவட்டப்பகுதியில் அமைந்துள்ள இது மாஸ்கோவிலுள்ள இரண்டு கத்தோலிக்க திருச்சபையின் தேவாலயங்களில் ஒன்றும், இரசியாவில் பெரியதும் ஆகும். பேராலயக் கட்டுமானம் 1894 இல் சார் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. 1899 இல் அடிக்கல்நாட்டப்பட்டு, 1901 இல் கட்டுமான வேலைகள் தொடங்கின, பத்து ஆண்டுகளுக்குப்பின் அவ்வேலைகள் நிறைவடைந்தன. சிவப்பு செங்கல்லினால் மூன்று சுற்றுகளைக் கொண்டதாகக் கட்டப்பட்ட இப்பேராலயக் கட்டமைப்பு வடிவம் கட்டடக்கலைஞரான தோமஸ் பக்தனோவிச் துவர்ஷெட்ஸ்கியால் மேற்கொள்ளப்பட்டது. மேலும்..