விடையபுரம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்

விடையபுரம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம் தொகு

இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் விடையபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி தொகு

இக்கோயிலின் மூலவராக சுந்தரேசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி மீனாட்சி ஆவார்.[1]

அமைப்பு தொகு

இக்கோயிலின் நுழைவாயிலில் ராஜகோபுரம் உள்ளது. சிவன் கிழக்கு பார்த்த நிலையில் உள்ளார். சிவனை நோக்கிய நிலையில் பலி பீடத்திற்கு முன்பாக நந்தி கழுத்தை வலது பக்கம் சாய்ந்த நிலையில் அமைந்துள்ளது.[1]

திருவிழாக்கள் தொகு

பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.[1]

மேற்கோள்கள் தொகு