வீ. கு. சந்திரசேகரன்

வீ. கு. சந்திரசேகரன் (பிறப்பு சூலை 2 1947) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் எழுத்துறையில் இலட்சுமி மணாளன், நிலவெழிலன் முதிய புனைப் பெயர்களால் அறிமுகமாகியுள்ளார். தொழில் ரீதியாக இவர் ஒரு அச்சக உரிமையாளராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1965 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சினிமா உலகம் பற்றி பல தொடர் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

நூல்கள் தொகு

நாவல்கள் தொகு

  • "பயணம்"
  • "நிறைந்த வெளியில் நீலவானம்" (1981)
  • "நித்திலப் பூ" (1997)

சிறுகதைத் தொகுப்புகள் தொகு

  • "நறுமணம்"
  • "புதிய தலைமுறை"
  • "மாதவி மயக்கம்"

கட்டுரைகள் தொகு

  • "பாடிப் பறந்த குயில்"
  • "சாதனைத் தலைவர் சாமிவேலு"

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ._கு._சந்திரசேகரன்&oldid=3229026" இலிருந்து மீள்விக்கப்பட்டது