வேடபாளையம்

வேடபாளையம் இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூா் ஒன்றியத்தில் அமைந்துள்ள உத்திரமேரூா் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட ஊராகும். இது உத்திரமேரூரில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்திரமேரூர் கல்வெட்டுக்கு அருகில் உள்ளது. இது உத்திரமேரூா் - வந்தவாசி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. வைர மேக தடாக ஏரி என்றழைக்கப்படும் உத்திரமேரூா் ஏரியின் மிக அருகில் அமைந்துள்ளது. இந்த ஏரி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய ஏரியாகும். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி, பொது நியாயவிலைக் கடை உள்ளது. அதன் அருகில் தமிழ்நாடு போக்குவரத்து பணிமனை உத்திரமேரூா் கிளையும் பொதுப்பணித்துறை விருந்தினா் மாளிகையும் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேடபாளையம்&oldid=3925864" இலிருந்து மீள்விக்கப்பட்டது