ஹெப்சிபா (விளையாட்டு போட்டியாளர்)

ஹெப்சிபா [1](Hepziba) இவர் இந்திய நாட்டில் தமிழ் நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையிலிருந்து பிரேசில் நாட்டின் ரியோடி செனிரோ நகரில் 2016 ஆம் ஆண்டு நடந்த தெருக்குழந்தைகளுக்கான போட்டியில் 100 மீட்டர் போட்டி முதல் மேலும் இரண்டு போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவர் ஆவார்.[2] தெருக்குழந்தைகளைப் பாதுகாக்கும் விதமாக 2010 ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் இப்போட்டி முதன் முதலில் நடத்தப்பட்டது. இவரின் வயது 16 ஆகும். நேரு விளையாட்டு அரங்கத்தின் ஓரத்தில் சாலையோர நடைமேடையில் வசித்த இவர் தற்சமயம் சென்னை மாநகராட்சி வழங்கியுள்ள வீடற்றவர்களுக்கான கூடாரத்தில் வசித்துவருகிறார்.[3]

மேற்கோள்கள் தொகு