1919 சர்வதேச பெண் தொழிலாளர் அவை

1919 சர்வதேச பெண் தொழிலாளர் அவை (The International Congress of Working Women ICWW), உலகெங்கிலும் உள்ள பெண் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். ஐசிடபிள்யுடபிள்யூ 1919 ஆம் ஆண்டின் முதல் சர்வதேச தொழிலாளர் அமைப்பு மாநாட்டில் பெண் தொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளத் திட்டமிட்டது. ஐசிடபிள்யுடபிள்யுடபிள்யு சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் விதிகளின் ஆவணத்தை உருவாக்குவதில் பங்களித்தது அது பெண்களின் வேலைவாய்ப்பு தொடர்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பு முடிவெடுப்பதில் குறிப்பிட்ட அளவு தாக்கத்தினையும் ஏற்படுத்தியது.

பின்னணி தொகு

தொழில்துறை யுகமான பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகம் ஒரு புதிய யுகத்தின் திருப்பத்தை எதிர்கொண்டது. கை முறை உழைப்புகளில் இருந்து புதிய உற்பத்தி செயல்முறைக்கு மாற்றப்பட்டது. இந்த புதிய தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்கள் புதிதாக உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் ஆலைகளில் வேலை வாய்ப்புகளை அதிகரித்தன. உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள் எல்லா வயதினருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகிய ஆனைவருக்கும் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன: .

பெரிய உற்பத்தியாளர்களால் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டதால், அவர்கள் அனைவரும் வேலை நிலைமைகள் மோசமாக இருப்பதை ஒன்றாக உணர்ந்தனர். குறைந்த கூலி மற்றும் வாழ முடியாத வேலை நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அனைத்து தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்தனர். ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் மக்கள் தொகையில், குறிப்பாக பெண்களின் தொழிலாள வர்க்கத்தில் இதே போன்ற நலன்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டது. வேலை செய்யும் இடத்தில் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் கொடூரமான நிலைமைகளை எதிர்கொள்ளும் அதே வேளையில், வீட்டு வேலை செய்பவர்களாகவும் பெண்கள் தங்கள் வேலையில் சவாலை எதிர்கொண்டனர். [1] எல்லா இடங்களிலும் பெண்கள் "பலவீனமான பாலினம்" என்று கருதப்படுகிறார்கள், மேலும் ஒரு ஆணால் முடிந்த வேலையை பெண்களால் செய்ய இயலாது. அதனால் பெண்கள் பெரும்பாலும் பணிநீக்கம் செய்யப்பட்டனர், அதே நேரத்தில் அவர்களின் வீட்டு வேலைகள் பணியிடத்தில் புதிய நுட்பங்களைக் கற்றுக்கொள்வதை மட்டுப்படுத்தியது. தொழில்துறை புரட்சி பாரம்பரிய வாழ்க்கை முறைகளை சர்ச்சைக்குள்ளாக்கியது மற்றும் பெண்கள் பொருளாதார பிழைப்புக்கான சொந்த வழியைக் கண்டுபிடித்து குடும்ப வாழ்க்கையை பராமரிக்க வழிவகுத்தது. [2] அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் அமைப்புகளை உருவாக்கி பெண்களின் உரிமைக்காக போராடத் தொடங்கினர். பெண்கள் தேசிய எல்லைகளில் இணைப்புகளை உருவாக்க முயன்றனர். நிதானம், சர்வதேச அளவில் பெண்களுக்கான உயர்கல்வி, தொழில் வாய்ப்புகள் மற்றும் பெண்களின் வாக்களிக்கும் உரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக 1888 ஆம் ஆண்டில் சர்வதேச பெண்கள் குழுமம் உருவாக்கப்பட்டது. உலகெங்கிலும் பெண்கள் தொழிலாளர் அமைப்புகள் நிறுவப்பட்டன.

முதலாம் உலகப் போருக்கு முன்னதாக, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் தொழிலாளர் சங்கங்கள் வளர்ந்தன. [3] போரின் முடிவில், பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், பிரச்சினைகளை, பெண்கள் சமத்துவம் அடைவதற்கான வழிகள் ஆகியவற்றை எடுத்துரைக்க இந்த தொழிற்சங்கங்கள் தங்களது உறுப்பினர்களை சர்வதேச மாநாடுகளுக்கு பிரதிநிதிகளாக அனுப்பியது.

அவை உருவாக்கம் தொகு

1919 ஆம் ஆண்டு பாரிசு அமைதி மாநாடு தொடங்கி வெர்சாய் ஒப்பந்தம் நிறுவப்பட்டது. ஒப்பந்த விவாதங்களில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐநா அமைப்பு பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) உருவாக்கம் பற்றிய விவாதம் அடங்கும். தொழிலாளர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, சர்வதேச தொழிலாளர் தரத்தை நிர்ணயிப்பது மற்றும் சமூக நீதியின் மூலம் அமைதியை மேம்படுத்துவது ஆகிய பொறுப்புகளை ஐஎல்ஓ கொண்டுள்ளது. [4]

சான்றுகள் தொகு

  1. Eileen Boris, Home to Work: Motherhood and the Politics of Industrial Homework in the United States(New York: Cambridge University Press, 1994) 10.
  2. Carol Riegelman Lubin and Anne Winslow, Social Justice For Women: The International Labor Organization and Women (Durham and London: Duke University Press, 1990)15.
  3. Eileen Boris, Home To Work, 87.
  4. Laura Vapnek, "The 1919 International Congress of Working Women: Transnational Debates on the Woman Worker". Journal of Women's History. (2014): 164.