1957 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

இந்தியாவில் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1957 என்பது 1957-ல் இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தால், 1957 மே 11 அன்று வாக்கெடுப்பு நடந்திருக்கும்.

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1957

← 1952 11 மே 1957 1962 →
 
வேட்பாளர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
கட்சி சுயேச்சை
சொந்த மாநிலம் தமிழ்நாடு

தேர்வு வாக்குகள்
போட்டியின்றி தேர்வு

முந்தைய துணைக் குடியரசுத் தலைவர்

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
சுயேச்சை

துணைக் குடியரசுத் தலைவர் -தெரிவு

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
சுயேச்சை

அட்டவணை தொகு

தேர்தல் அட்டவணையினை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏப்ரல் 9, 1957 அன்று வெளியிட்டது.[2]

வரிசை எண் வாக்கெடுப்பு நிகழ்வு தேதி
1. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 18 ஏப்ரல் 1957
2. வேட்புமனு பரிசீலனைக்கான தேதி 20 ஏப்ரல் 1957
3. வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி 23 ஏப்ரல் 1957
4. வாக்கெடுப்பு தேதி 11 மே 1957
5. எண்ணும் தேதி -

முடிவுகள் தொகு

இத்தேர்தலில் வாக்களிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 735 பேர் வாக்காளராக கொண்டிருந்தது. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மட்டுமே சரியான முறையில் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர், எனவே 23 ஏப்ரல் 1957 அன்று துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இவர் தனது இரண்டாவது பதவிக்காலத்தை மே 1957-ல் தொடங்கினார்.[2]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. BACKGROUND MATERIAL REGARDING FOURTEENTH ELECTION TO THE OFFICE OF THE VICE-PRESIDENT, 2012, ELECTION COMMISSION OF INDIA
  2. 2.0 2.1 "Background material related to Election to the office of Vice-President of India, 2017". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 26 January 2022.