அங்கதன்
அங்கதன் வாலியின் மகன். சீதை இருக்கும் இடத்தைத் தேடி கண்டு பிடிக்குமாறு, சுக்ரீவனால் அனுப்பப்பட்டவர்களில் இவனும் ஒருவன். போருக்கு முன்னர் இராவணனிடம், இராமரால் தூதுவனாக அனுப்பப்பட்டவன். [1]
இராம-இராவணப் போரில், இரட்டைப்பிறவிகளான நராந்தகன் மற்றும் தேவாந்தகனை, வானர இளவரசனான அங்கதன் கொல்கிறார்.
போர் முடிந்த பிறகு, கிஷ்கிந்தையின் இளவரசனாக ராமரால் முடி சூட்டப்பட்டவன்.