அண்ணா நகர் ஐயப்பன் கோயில்

சென்னையிலுள்ள ஓர் ஐயப்பன் கோயில்

அண்ணாநகர் ஐயப்பன் கோயில்[1] இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ளது. சென்னையில் பக்தர்கள் அதிக அளவில் தரிசிக்க வரும் ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஆண்டின் எல்லா தினங்களிலும் முறைப்படி வழிபாடுகள் நடக்கின்றன. கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. இந்த காலகட்டத்தில் பக்தர்கள் பெருமளவில் விரத மாலை அணிதலையும், இருமுடி கட்டுதலையும் இங்கு செய்கிறார்கள்.

அண்ணா நகர் ஐயப்பன் கோயில்
ஐயப்பன் கோயில், அண்ணா நகர், சென்னை
அண்ணா நகர் ஐயப்பன் கோயில் is located in சென்னை
அண்ணா நகர் ஐயப்பன் கோயில்
சென்னையில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவு:C-45, இரண்டாம் அவன்யூ
ஆள்கூறுகள்:13°5′6″N 80°12′47″E / 13.08500°N 80.21306°E / 13.08500; 80.21306
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரள பாரம்பரிய பாணி
வரலாறு
கோயில் அறக்கட்டளை:ஐயப்ப சேவா சங்கம்
இணையதளம்:annanagarayyappatemple.org வழிபாட்டு நேரம் - காலை 6-11; மாலை 5-8.30

கோயில் வரலாறு தொகு

1979 ஆம் ஆண்டு சிறிய அளவில் இக்கோயில் கட்டப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ ஐயப்ப சேவா சமாஜம், அண்ணா நகர் இக்கோயிலை அப்போது நிறுவி இன்றும் நிர்வகித்து வருகிறது. இந்த அமைப்பின் 5 ஆண்டுகால முயற்சிகளால், ஒரு முழுமையான கோயில் கேரள மாநிலத்திற்குரிய கட்டிடக்கலை நுணுக்கத்துடன் 1984 ஆம் ஆண்டு மே மாதம் கட்டிடக்கலை நிபுணர் கணிபய்யூர் கிருஷ்ணன் நம்பூதிரியால் கட்டி முடிக்கப்பட்டது.

கோயிலின் அமைப்பு தொகு

கோயிலின் கருவறை மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஐயப்பன் வீற்றிருக்கும் கருவறைக்கு இடதுபுறம் கடவுளர்கள் கணபதி மற்றும் சுப்பிரமணியர் சிலைகளும், வலதுபுறம் கடவுள் துர்கா சிலையும் உள்பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று கடவுளரும் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்கள். நவக்கிரகங்கள் வீற்றிருக்கும் மேடை, கோயிலின் தென்கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ளது. கடவுள் ஆஞ்சநேயரின் சிலை, கோயிலின் தென்மேற்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு