அரக்கோணம் இரட்டைப்படுகொலை வழக்கு 2021

அரக்கோணம் இரட்டைப்படுகொலை வழக்கு 2021 என்பது இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தாம்பாடி கவுதம் நகரில் பெருமாள்ராசபேட்டை, சோகனூர், செம்பேடு பகுதிகளைச் சேர்ந்த இருபிரிவு இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டபோது நிகழ்ந்த சம்பவத்தைக் குறிக்கிறது. இச்சம்பவத்தில் அரக்கோணம் அருகே சோகனூர் பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.[1] 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு அடுத்த நாள் இருவர் படுகொலை செய்யப்பட்டதால், தமிழகத்தில் பதற்றம் ஏற்பட்டது. அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்

மேற்கோள்கள் தொகு

  1. "அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் நீதிமன்றத்தில் சரண்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.