அரசு மேனிலைப் பள்ளி, திருவிதாங்கோடு

திருவிதாங்கோடு அரசு மேனிலைப் பள்ளி, என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் உள்ள ஒரு மேனிலைப் பள்ளி ஆகும். உயர்நிலைப் பள்ளியாக இயங்கிவந்த இப்பள்ளியானது, 1980களில் மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கஞ்சிக்குழி, பாத்திரமங்கலம், கோழிப்போர்விளை, பூக்கடை, புங்கறை, வட்டம், மைலோடு, கேரளபுரம் போன்ற ஊர்களில் தொடக்கக் கல்வி கற்ற மாணவர்கள் மேல்நிலை வகுப்புக்களுக்கு இப்பள்ளியில் சேருகின்றனர்.