அரண் என்பது பகைவர்களிடமிருந்து நாட்டு மக்களைக் காப்பதற்காக அமைக்கப்பட்ட கட்டமைப்புகளில் ஒன்று. அரண் வகைகளாக நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் போன்றவை கூறப்படுகின்றன.[1][2]

அரண்களின் வகைகள் தொகு

நிலவரண் தொகு

ஒரு நாட்டில் பகைவர்கள் நுழையாத வகையில் நீரும், நிழலும் இல்லாத இடங்களில் கட்டப்படுவது இவ்வகை அரணாகும். இவ்வரணில் மூன்று மதில்கள் இருக்கும். இவை புற மதில், இடை மதி, அகமதில் எனப்படும். ஒவ்வொரு மதிலின் வெளியேயும் ஆழமான அகழியும் இருக்கும். அதனை அடுத்து மிளை எனப்படும் காவற்காடும் இருக்கும். காவற்காட்டில் முள் மரமும், முட்செடி கொடிகளும் அடர்ந்திருக்கும். பகைவர்கள் காலில் தைப்பதற்காக நெருஞ்சி முள் போன்ற இரும்பு முட்கள் காவற்காட்டில் எங்கும் பரப்பப்பட்டு இருக்கும். தப்பி ஓடும் பகைவர்கள் காலில் மாட்டி இழுப்பதற்காக தோட்டி என்னும் இரும்புக் கொக்கிகள் காவற்காடு எங்கும் முளையடித்துக் கட்டப்பட்டு இருக்கும். மதிலின் மேற்புறத்தில் நான்கு மூலைகளிலும் தூண்கள் போல் மிக உயர்ந்த அகன்ற கட்டிடம் இருக்கும். இதற்கு கொத்தளம் என்று பெயர். இதன் மேல் இரவும், பகலும் காவலர்கள் கண்கானித்துக் கொண்டு இருப்பர். பகைவர் வருகையை இவர்களே கண்காணித்து அரசர்களுக்கு சொல்லுவர்.

நீரரண் தொகு

அரசர்கள் பாதுகாப்பு கருதி கோட்டையை கடல் அல்லது பெரிய நீர்ப்பரப்புகளுக்கு அருகில் அமைத்து அதன் வெளிப்புறத்தை அகழிக்குப்பட்தில் நீர்ப்புறத்தால் சூழச் செய்து காப்பர். நீர்புகும் வழிக்கேற்ப நிலவரைகளையும், சுருங்கை வழிகளையும் ஏற்படுத்திக் கொள்வது நீரரண் எனப்படும்.

மலையரண் தொகு

மன்னர்கள் ,நிலவரண் அமைப்புகளுடன் அகழியும், காவற்காடும் இல்லாமல் செங்குத்தான மலைகளில் பாதுகாப்பிற்காக சுற்றுச் சுவரை ஏற்படுத்தி அரண் அமைத்து இருப்பர். இதுவே மலையரண் ஆகும்.

காட்டரண் தொகு

நிலவரண் அமைப்புகளுடன் மனிதன் நுழைய இயலாதவாறு அடர்த்தியான காடுகளுக்கு நடுவே கோட்டைகளை அமைப்பது அல்லது கோட்டைகளைச் சுற்றி காடுகள் அமைப்பது காட்டரண் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. வட இந்தியக் கோட்டைகள் , பக்.18
  2. அரண் விகாஸ்பீடியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரண்&oldid=3714449" இலிருந்து மீள்விக்கப்பட்டது