அரிசில் ஆற்றங்கரையில் உள்ள ஊர் அரிசில். இவ்வூரில் வாழ்ந்த புலவர் அரிசில் கிழார். இவரது பாடல்கள் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அரிசிலாற்றங்கரையிலுள்ள மற்றோர் ஊர் அம்பர். அருவந்தை என்னும் சங்ககால வள்ளல் இவ்வூரில் வாழ்ந்துவந்தான். இங்குள்ள சிவன் கோயில் தேவாரப் பாடல்களால் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் இது அரிசிற்கரைப்புத்தூர் என வழங்கப்படுகிறது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிசில்&oldid=3791935" இலிருந்து மீள்விக்கப்பட்டது