அலவாய்ப்பட்டி பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்

அலவாய்மலை சுப்பராயர் கோயில் அல்லது அலவாய்ப்பட்டி பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அலவாய்ப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது.

அலவாய்ப்பட்டி பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், நாமக்கல்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ் நாடு
மாவட்டம்:நாமக்கல் மாவட்டம்
அமைவு:அலவாய்பட்டி,வெண்ணந்தூர்,,நாமக்கல்
கோயில் தகவல்கள்
மூலவர்:பாலசுப்பிரமணியர், முருகன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென் இந்தியா, கோயில்கள்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1000 ஆண்டுகளுக்கு முன்

தல வரலாறு :இங்கு சித்தர்கள் பலர் தங்கி ரசவாதம் மூலமாக பொன் செய்து சேர்த்து வைத்தனர். அதை பழனி முருகப்பெருமான் கண்ணுற்று சித்தர்கள் பொன் செய்யும் வேலையில் இருந்து அவர்களை தடுத்தாட் கொள்ள விரும்பி திருவிளையாடல் செய்ய விரும்பினார். சித்தர்களிடம் சென்று ஆடுமேய்க்கும் இளைஞனைப் போன்று சீடராக சேர்ந்தார். ஒரு நாள் அந்த பொன் மலையை தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தார். அதை தற்போது வையப்பமலை என்ற இடத்தில் வைத்தார் என்பது புராணவரலாறு ஆகும்.

திருவிழா தொகு

இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர். ஆகிய விழா நாட்களில் உற்சவங்கள் நடக்கிறது.

திறக்கும் நேரம் தொகு

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

வெளி இணைப்புகள் தொகு