அலிபாபா 40 தொங்கலு

அலிபாபா 40 தொங்கலு ("Ali Baba 40 Dongalu") என்பது 1970 ஆம் ஆண்டு பி. விட்டலாச்சாரியா இயக்கிய தெலுங்கு மொழி கற்பனை இராபின்ஹூட் வகை நாயகத் திரைப்படமாகும். [2] என். டி. ராமராவ் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு காந்தாசாலா இசையமைத்துள்ளார். [3] கௌதம் பிக்சர்ஸ் பதாகையின் கீழ் என். ராமபிரம்மம் இப்படத்தை தயாரித்துள்ளார். [4] பாபா அண்ட் தி ஃபார்டி தீவ்ஸ் என்ற அரேபிய இரவுகள் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அலிபாபா 40 டோங்கலு
இயக்கம்பி. விட்டலாச்சாரியா
தயாரிப்புஎன். இராமபிரம்மம்
கதைடி. வி. நாரச ராஜு (வசனம்)
இசைகண்டசாலா
நடிப்புஎன். டி. ராமராவ்
ஜெ. ஜெயலலிதா
ஒளிப்பதிவுஎச். எஸ். வேணு
படத்தொகுப்புகந்தசாமி
கலையகம்ஸ்ரீ கௌதம் பிக்சர்ஸ்[1]
வெளியீடுஏப்ரல் 4, 1970 (1970-04-04)
ஓட்டம்179 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதொலுங்கு

கதைக்களம் தொகு

பாக்தாத்தில் பல்வேறு இடங்களில் 40 திருடர்கள் பெரும் கொள்ளைகளைச் செய்து, திருடப்பட்ட புதையலை சீசேம் என்ற இரகசியக் குகையில் மறைத்து வைப்பதில் படம் தொடங்குகிறது. ஒருமுறை அவர்களின் சர்தார் தனது உதவியாளர் சோட்டுவை தனது மகள் மர்ஜியானாவுடன் நகரத்தில் உள்ள செல்வந்தர்களைக் கண்டுபிடிக்க அனுப்புகிறார். அலிபாபா ஒரு இளம் மற்றும் ஆற்றல்மிக்க பையன், மர்ஜியானாவின் நடன நிகழ்ச்சியைப் பார்த்து, அவளுடன் ஒரு அறிமுகத்தை வளர்த்துக் கொள்கிறார், இருவரும் காதலிக்கிறார்கள்.

அலிபாபாவும் அவரது தாயார் சந்த்பிபியும் தனது மூத்த சகோதரர் காசிம் கானுடன் வசிக்கிறார்கள், அவர் ஒரு பணக்கார மனிதர், ஆனால் ஒரு பெரிய கஞ்சர். அதேபோல், அவரது மனைவி சுல்தானா ஒரு புத்திசாலி. அவர்கள் அலிபாபாவைப் பிரித்து, அவரது வாழ்வாதாரத்திற்காக இரண்டு கழுதைகளை வழங்குகிறார்கள், எனவே, அலிபாபா காட்டில் இருந்து மரங்களை வெட்டிக் கொண்டு வர முடிவு செய்கிறார். அலிபாபா மரங்களை வெட்டிக்கொண்டிருக்கும்போது, திருடர்களின் தலைவன் ஒரு குகையின் கதவு திறக்கும்போது சில வார்த்தைகளை உச்சரிப்பதைக் கவனித்து, அவர்கள் வெளியே வரும்போது அவர் வேறு சில வார்த்தைகளைச் சொல்வதையும் கவனிக்கிறார். அலிபாபா இரகசியமாக குகைக்குள் நுழைந்து, நிறைய புதையல்களைக் கவனித்து, அதைச் சேகரித்து ஊருக்குள் திரும்பி வருகிறார்.

இப்போது அலிபாபா பாக்தாத்தின் பணக்காரர்களில் ஒருவராக மாறிவிட்டார். காசிம் கான் தனது சகோதரரின் செல்வத்தைப் பற்றிப் பொறாமைப்படுகிறார், இரகசியப் புதையலைப் பற்றி அமைதியாக அறிந்திருக்கிறார், குகையை அடைந்து திகைக்கிறார். அந்த நேரத்தில், திருடர்கள் வந்து அவரைப் பிடிக்கின்றனர். திருடர்களிடம் காசிம் தனது சகோதரருக்கும் இந்த இடம் தெரியும் என்று கூறி விடுகிறார். எனவே, அவர்கள் அவரைத் தங்கள் கோட்டைக்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்யத் தொடங்குகிறார்கள். நிலைமையைப் புரிந்த அலிபாபா உடனடியாக குகைக்கு விரைந்து சென்று கோட்டைக்கு செல்லும் வழியைக் கண்டுபிடிது விடுகிறார். ஆனால் மர்ஜியானா தப்பிக்க அவர்களுக்கு உதவும்போது அவரும் பிடிபட்டு விடுகிறார். இதை அறிந்த சோட்டு கோபத்தில் மர்ஜியானாவைக் கொல்ல முயற்சிக்கிறார், ஆனால் சர்தார் அவரது வழியைத் தடுப்பதன் மூலம் இறந்துவிடுகிறார். அலிபாபா தனது சகோதரனை மீண்டும் அழைத்து வருகிறார், திருடர்களைப் பார்த்து பயந்து, கண்களைக் கட்டி, தனது சகோதரனை ஒரு இருண்ட அறையில் வைத்து கிராம மருத்துவரை இரகசியமாக அழைத்து வருகிறார். சிகிச்சைக்குப் பிறகு, வெளியே செல்லும் போது, புத்திசாலித்தனமான மருத்துவர் கதவில் ஒரு அடையாளத்தை வைத்து விட்டுச் செல்கிறார். அதன்பிறகு, அலிபாபா மீண்டும் திருடர்களின் கோட்டையில் சென்று மர்ஜியானாவை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

இதற்கிடையில், காசிம் குணமடைந்து, தனது தவறை உணர்ந்து, அலிபாபாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இணையாக, சோட்டு ரகசியமாக மருத்துவரைச் சந்தித்து, சமீபத்தில் கொடிய காயங்களிலிருந்து யாரை குணப்படுத்தினார் என்பதை வெளிப்படுத்துமாறு கேட்கிறார். எனவே, அவர் குறிக்கப்பட்ட வீட்டைக் காட்டுகிறார், ஆனால் மர்ஜியானா அதைக் கவனித்து, ஒவ்வொரு வீட்டிலும் புத்திசாலித்தனமாக அதே அடையாளத்தை உருவாக்குகிறார். இப்போது சோட்டு முழு கிராமத்தையும் எரிக்க முடிவு செய்கிறார், அலிபாபா கிராமவாசிகளை 4 பக்கங்களிலிலும் இருந்து பாதுகாக்க ஊக்கப்படுத்துகிறார். இதை அறிந்த சோட்டு ஒரு சூழ்ச்சி செய்து, 39 எண்ணெய் பீப்பாய்களுடன் ஒரு எண்ணெய் வணிகராக கிராமத்திற்குள் நுழைகிறார், அதில் மீதமுள்ள திருடர்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, அவர்களின் சமையலறையில் எண்ணெய் இல்லாது போய் விட்டதால், அலிபாபா அவரை அன்புடன் வரவேற்கிறார்.மர்ஜியானா பீப்பாய்களில் இருந்து சிறிது எண்ணெய் சேகரிக்கச் செல்கிறாள், அங்கு திருடர்கள் அதில் மறைந்திருப்பதைக் கண்டுபிடித்து விடுகிறாள். இப்போது அலிபாபா ஒரு திட்டத்தை உருவாக்குகிறார். இரகசியமாக அனைத்து பீப்பாய்களையும் எரித்து விடுகிறார். கோபமடைந்த சோட்டு மர்ஜியானாவைப் பிடித்துக் கொண்டு குகைக்கு ஓடிவிடுகிறார், அலிபாபா அவரைப் பின்தொடர்ந்து சோட்டுவைத் தோற்கடிக்கிறார். இறுதியாக, அலிபாபா குகையில் உள்ள முழுப் புதையலையும் கிராமவாசிகளுக்கு விநியோகிக்கிறார். இறுதியாக, அலிபாபா மற்றும் மர்ஜியானாவின் திருமணத்துடன் படம் மகிழ்ச்சியுடன் முடிவடைகிறது.

நடிகர்கள் தொகு

 

மேற்கோள்கள் தொகு

  1. "Ali Baba 40 Dongalu (Overview)". IMDb.
  2. "Ali Baba 40 Dongalu (Music)". Know Your Films.
  3. "Ali Baba 40 Dongalu (Banner)". Chitr.com.
  4. "Ali Baba 40 Dongalu (Preview)". Spicy Onion.

வெளி இணைப்புகள் தொகு

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் அலிபாபா 40 தொங்கலு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிபாபா_40_தொங்கலு&oldid=3908743" இலிருந்து மீள்விக்கப்பட்டது