அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

உயர் கல்வி நிறுவனம், காரைக்குடி, இந்தியா

அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Alagappa Chettiar College of Engineering and Technology) தமிழ்நாடு காரைக்குடியில் அமைந்துள்ளது. காரைக்குடியைச் சேர்ந்த முனைவர் ஆர்.எம்.அழகப்ப செட்டியார் உருவாக்கிய பல கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று.[1][2]

அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
ACCET, Karaikudi
வகைஅண்ணா பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த கல்லூரி
உருவாக்கம்1952
அமைவிடம், ,
இணையதளம்http://www.accet.net

வரலாற்றுக் காலக்கோடு தொகு

  • இக்கல்லூரி 1952, ஜூலை 21-ஆம் நாள் தொடங்கப் பெற்றது.
  • கல்லூரியின் பிரதான கட்டிடத்தை அன்றைய குடியரசுத்தலைவர் முனைவர் இராசேந்திர பிரசாத் 1953-ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
  • 1966 ஆம் ஆண்டு இக்கல்லூரி தமிழ்நாடு அரசின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
  • 1983-ஆம் ஆண்டு நுண்ணலை மற்றும் ஒளியியல் பொறியியல் (Microwave and Optical Engineering) பட்டமேற்படிப்பு (M.E) தொடங்கப்பட்டது.
  • 2001-ஆம் ஆண்டு கணிப்பொறி அறிவியல் பொறியியல் படிப்பு (B.E Computer Science) தொடங்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "About ACGCET" (PDF). Anna University, Chennai. பார்க்கப்பட்ட நாள் 2 February 2016.
  2. The Hindu : Tamil Nadu News : Chief Minister to present best colleges awards