அ. ரா. பெருமாள்

அ. ரா. பெருமாள் (A. R. Perumal)(பிறப்பு 17 மே 1925-இறப்பு 21 ஏப்ரல் 1998) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையினைச் சார்ந்தவர். இவர் அருப்புக்கோட்டை தேவாங்கர் பள்ளியில் கல்வி பயின்றார். முத்துராமலிங்கத் தேவரின் தொண்டராகச் செயல்பட்ட இவர் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியின் தலைவர்களுள் ஒருவராக இருந்துள்ளார். இவர் 1967 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் சுதந்திராக் கட்சி மற்றும் பார்வார்டு பிளாக் கட்சிகளின் வேட்பாளராக காரியாப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. தமிழ்நாட்டுச் சட்டப்பேரவை ”யார்-எவர்” [Madras Legislative Assembly "Who's Who"]. Madras: Madras Legislative Assembly Department. 01 (published 01.03.1968). பக். 278. 
  2. தமிழ்நாடு சட்டப் பேரவை “யார்-எவர்” [Tamil Nadu Legislative Assembly "Who's Who"]. Madras: Tamil Nadu Legislative Assembly Department. 1971 (published 01.01.1972). பக். 452. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._ரா._பெருமாள்&oldid=3538123" இலிருந்து மீள்விக்கப்பட்டது