ஆனந்த் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்

சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி

ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆப் ஹையர் டெக்னாலஜி (Anand Institute of Higher Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னை, கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும் . இக்கல்லூரியானது டி. கலசலிங்கத்தால் நிறுவப்பட்டது. இது கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் சகோதரி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்திற்கு டி. கலசலிங்கத்தின் மனைவி திருமதி. கே. ஆனந்தம் அம்மாள் பெயர் இடப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் ஆறு துறைகளில், இளங்கலை பொறியியல் படிப்புகளை வழங்கப்படுகின்றன, 2012-2013 ஆம் ஆண்டில் ஆனந்த் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் நிறுவப்பட்டது. மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனி விடுதி வசதிகள் வழங்கப்படுகின்றன. போக்குவரத்து வசதியானது இங்கு உள்ள 40 பேருந்துகளால் வழங்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் சென்னையின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்றுவருகின்றன.

ஆனந்த் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
உருவாக்கம்2000
தலைவர்முனைவர் கே. சிறீதரன்
முதல்வர்முனைவர் கே. திவாகர்
பணிப்பாளர்முனைவர் எஸ். அறிவழகி
அமைவிடம், ,
12°49′06″N 80°13′43″E / 12.81824°N 80.228509°E / 12.81824; 80.228509
சேர்ப்புசென்னை ஆண்ணா பல்கலைக் கழகம்.

இந்த கல்லூரியில் 1500 பேர் அமரக்கூடிய முதன்மை விளையாட்டு அரங்கமும், 150 பேர் அமரக்கூடிய ஒரு சிறிய விளையாட்டு அரங்கமும் உள்ளது. இரண்டு விளையாட்டு அரங்கங்களும் குளிர்சாதன வசதியைக் கொண்டுள்ளன.

வெளி இணைப்புகள் தொகு