ஆப்கானித்தானில் பலதார மணம்

பல மனைவிகள் திருமணம்

ஆப்கானித்தானில் பலதார மணம் (Polygamy in Afghanistan) இசுலாமியச் சட்ட முறைமை இசுலாமிய குடியரசாக இருக்கும் ஆப்கானிஸ்தான் , பலதார மணம் பலதார மணம் செய்ய அனுமதிக்கிறது. ஆப்கானித்தானி ஆண்கள் நான்கு மனைவிகளை மணக்கலாம். ஏனெனில் இசுலாம் அத்தகைய நடவடிக்கைகளை அனுமதிக்கிறது.

ஒரு மனிதன் தன் மனைவிகள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்; இருப்பினும், இந்த விதிமுறைகள் அரிதாகவே பின்பற்றப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆணுக்கு அதிகபட்சம் நான்கு மனைவிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகையில், குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான பெண்கள் அவருடைய ' மறுமனையாட்டிகளாக' அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தப் பெண்கள் பாதுகாப்பற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள். மேலும், ஒரு அவர்களுக்கு பாதுகாவலராக ஒரு ஆண் தேவைப்படுகிறார்.[1]

கலாச்சாரக் காரணங்கள் தொகு

ஒரு ஆண் மற்றொரு மனைவியை மணந்து கொள்வதற்கான பொதுவான காரணம் ஒரு பெண்ணின் மலட்டுத்தன்மையாகும். ஆப்கானித்தான் சமூகத்தில் விவாகரத்துக்கு ஏற்படும் அவப்பெயர் காரணமாக, கணவன் மனைவிக்கு இடையே உள்ள வேறுபாடுகளை சமாளிக்க பலதார மண உறவுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மற்ற அறிக்கைகள், பெரும்பாலான ஆப்கானித்தான் பெண்கள், கணவனால் துன்புறுத்தப்பட்டாலும் அல்லது அநியாயமாக நடத்தப்பட்டாலும், தனிமையில் இருப்பதை விட ஒரு ஆணின் மூன்றாவது அல்லது நான்காவது மனைவியாக இருப்பதை விரும்புகின்றனர்.[2] செல்வந்தர்கள் பல மனைவிகளை திருமணம் செய்வது மிகவும் பொதுவானது. பலதார மணம் செய்து கொள்வது ஆண்களுக்கு அதிக நிலப் பங்குகள், சொத்து, செல்வம், குழந்தைகள் போன்றவற்றைப் பெற அனுமதிக்கிறது. பலதார மணம் பொருளாதார ரீதியாக லாபகரமானதாகக் கருதப்படுகிறது. மேலும், தங்களின் சமூக செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள முடியும். வடக்கு ஆப்கானித்தானில், தரைவிரிப்புகளையும், கம்பளங்களையும் நெசவு செய்வதில் திறமையான பெண்கள் குடும்பத்தின் வருமானத்திற்கு பங்களிப்பதற்கான ஆதாரமாக கருதப்படுகிறார்கள். ஆப்கானித்தானில் பலதார திருமணங்களில் வயதான ஆண்கள் இளைய பெண்களை திருமணம் செய்வது பொதுவானது. வயதான் கணவனுக்கு மரணம் ஏற்பட்டால், விதவை பெண்கள் மறுமணம் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். தனது குடும்ப உறுப்பினரின் விதவையை திருமணம் செய்ய ஆண்கள் கடமைப்பட்டுள்ளனர். தனது மைத்துனனை மறுமணம் செய்ய மறுக்கும் ஒரு விதவை தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை இழக்க நேரிடும். [3]

பாலின பாத்திரங்கள் தொகு

ஆண்கள் தொகு

பலதார மணம் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அனைத்து பல ஆப்கானிய ஆண்களாலும் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பல மனைவிகளை ஆதரிக்கக் கூடிய சில ஆண்கள், ஏகபோக உறவுகளை விரும்புகிறார்கள். ஏனெனில் ஆப்கானித்தானின் உள்நாட்டு பிரச்சனைகளைப் பற்றி கவலை இருக்கிறது.[4] ஒரே ஆணை திருமணம் செய்த பெண்களிடையே உள்ள தகராறுகள் பலதார மணத்தை ஏற்க மறுப்பதற்கு மிகவும் பொதுவான காரணம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. [5]

அதிக எண்ணிக்கையிலான ஆப்கானித்தான் ஆண்கள் மனைவியை வாங்க முடியாது (வரதட்சணை மற்றும் திருமணத்திற்கு பணம் வழங்குவதன் மூலம்). ஆயர் மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஒரு மனைவியை மட்டுமே மணக்கிறார்கள்.[4] பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கான இலாப நோக்கற்ற சர்வதேச அமைப்பு 2010இல் 420க்கும் மேற்பட்ட ஆப்கானித்தான் ஆண்களை நேர்காணல் செய்தபோது, 82 சதவிகிதத்தினர் தாலிபான் இயக்கத்தில் சேரும் இளைஞர்களை தடுக்க சிறந்த வழி அவர்களுக்கு வரதட்சணை மற்றும் திருமணங்களுக்கு பணம் வழங்குவதாக தெரிவித்தனர்.[6] பொதுவாக, சில ஆண்களுக்கு பல மனைவிகள் இருப்பதற்கும், அதே நேரத்தில், ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு மனைவி இருப்பதற்கும் போதுமான பெண்கள் எண்ணிக்கை இல்லை.

பெண்கள் தொகு

திருமணமான ஆண்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு சம்மதம் தேவையில்லை. பெண்கள் சம்மதத்தைக் காட்ட கட்டாயப்படுத்தும் சில காரணிகள் குடும்பத்தில் மையப்படுத்தல் இல்லாமை, பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் முந்தைய கணவரின் மரணம் ஆகியவை.[7] பெண்கள் தனியாக வாழ்வது ஆப்கானித்தானில் உள்ள சமூக விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால் அவர்கள் பெற்றோர்களையும் உறவினர்களையும் சார்ந்திருக்கிறார்கள். திருமணமாகாத பெண்கள் ஒரு சுமையாக பார்க்கப்படுகிறது எனவே அவர்கள் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.[7] ஆணின் திருமண நிலை தெரியாமல் பல பெண்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கின்றனர். ஆப்கானித்தானின் குடிமைச் சட்டம், ஆண்கள் தனது மனைவிகளுக்கோ அல்லது வருங்கால மணப்பெண்களுக்கோ தனது நிலையை தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளார் என்று கூறுகிறது. குடிமைச் சட்டத்தில் உள்ள இந்த நிலை பல சந்தர்ப்பங்களில் நடைமுறையில் இல்லை. 34% ஆண்கள் தங்கள் இரண்டாவது மனைவியிடம் தங்களது திருமண நிலை பற்றி சொல்ல தவறிவிடுகின்றனர்.[7] ஆப்கானித்தானின் குடிமைச் சட்டம் முதல் மனைவியின் கணவரின் இரண்டாவது திருமணத்தை அங்கீகரிக்கும் திறனைக் கொண்டுள்ளது. மனைவியின் சம்மதத்தைப் பெறத் தவறினால் கணவனைப் பிரிந்து செல்லும் உரிமையை சட்டம் அனுமதிக்கிறது. பல பெண்கள் இந்த உரிமையை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் அவர் தனது குழந்தைகளின் பாதுகாப்பை இழக்கும் அபாயம், நிதி உதவி மற்றும் குடும்ப நிலை போன்றவை.[7]

மேற்கோள்கள் தொகு

  1. Saikal, Amin. Modern Afghanistan : a history of struggle and survival. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781780761220. இணையக் கணினி நூலக மையம்:815836800. 
  2. "Afghanistan: Family Code". Archived from the original on 2017-11-01. பார்க்கப்பட்ட நாள் 2009-04-27.
  3. "Decisions, Desires and Diversity: Marriage Practices in Afghanistan". Afghanistan Research and Evaluation Unit: (section 8.2). February 2009. 
  4. 4.0 4.1 Gallichan, Walter Matthew (2013). Women under polygamy. Theclassics Us. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1230253858. இணையக் கணினி நூலக மையம்:923418858. 
  5. Afghanistan Research and Evaluation Unit (February 2009) Decisions, Desires and Diversity: Marriage Practices in Afghanistan (section 8.5)
  6. Weiss (July 22, 2012). "Runaway population growth often fuels youth-driven uprisings". 
  7. 7.0 7.1 7.2 7.3 Open Society Institute & Soros Foundations Network (2006) Polygamy in Afghanistan, p. 34