ஆற்றுச்சந்தி

புவியியலில் இரண்டு அல்லது பல ஆறுகள் (ஆறும் துணை ஆறும்) ஒன்றோடொன்று கலக்கும் இடம் ஆற்றுச்சந்தி ஆகும் (ஆங்கிலம்: confluence). அதனை ஆற்றுச்சங்கமம் என்றும் கூறலாம்.

பவானி ஆறு காவிரியில் இணையும் ஆற்றுச்சந்தி

பவானி ஆறு காவிரியில் இணையும் சந்தியில் பவானி நகரம் அமைந்துள்ளது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் கூடுகின்ற இடம் திரிவேணி சங்கமம். இவ்விடம் அலகாபாத் நகரில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்றுச்சந்தி&oldid=1887739" இலிருந்து மீள்விக்கப்பட்டது