இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்

இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம் என்பது 2000 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் தொடங்கப்பட்ட ஒரு மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது இதய அன்னையின் பிரான்சிசிகன் சகோதரிகளால் தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியானது பாரதிதாசன் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றது.[1]

நிர்வாகம் தொகு

இந்தக் கல்லூரியின் நிர்வாகப் பொறுப்பும், முதல்வர் பொறுப்பும் இமாகுலேட் சகோதரிகளால் நிர்வகிக்கப்படுகிறது.

பாடப்பிரிவுகள் தொகு

இளநிலைப்படிப்புகள், முதுநிலைப் படிப்புகள், பட்டயப் படிப்புகள்

துறைகள் தொகு

இதயா மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை உட்பட 10 துறைகள் உள்ளன.

தமிழ்த்துறையில் வழங்கப்படும் பாடப்பிரிவுகள் தொகு

  • ஆய்வியல் நிறைஞர் பட்டம்
  • முனைவர் பட்டம்

மேற்கோள்கள் தொகு

  1. இதயா மகளிர் கல்லூரி ஆசிரியர் மாணவர் கையேடு(2017), இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்-612001.

வெளியிணைப்புகள் தொகு

கல்லூரியின் இணையத்தளம்