இந்திராணி பொன்வசந்த்

இந்திராணி பொன்வசந்த் (Indirani Ponvasanth) திராவிட முன்னேற்றக்கழக அரசியல்வாதியும், மதுரை மாநகராட்சியின் 8-ஆவது மன்றத் தலைவர் ஆவார். இவர் மதுரை மாநகராட்சியின் இரண்டாவது பெண் மேயர் ஆவார். இவர் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற மற்றும் மாநகர உள்ளாட்சித் தேர்தல்களில் மதுரையின் 57-ஆவது வார்டில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து மதுரையின் இரண்டாவது மேயரானார்.[1]மதுரை மாநகராட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 67 இடங்களில் வெற்றி பெற்றது. மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலில் போட்டியிட வேறு வேட்பாளர்கள் யாரும் விண்ணப்பிக்காத நிலையில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான இந்திராணி பொன்வசந்த் போட்டியின்றி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

இந்திராணி பொன்வசந்த்
மேயர், மதுரை மாநகராட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
4 மார்ச் 2022
Deputyடி. நாகராஜன்
முன்னையவர்வி. வி. ராஜன் செல்லப்பா
மதுரை மாநகராட்சி உறுப்பினர்
(கவுன்சிலர்)
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மார்ச் 2022
தொகுதிகோட்டம் 57
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
(அகவை )
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்பொன்வசந்த்
வேலைஅரசியலர்

மேற்கோள்கள் தொகு

  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. "மதுரை மாநகராட்சி 8-வது மேயராக இந்திராணி பொறுப்பேற்பு: திமுக மாவட்டச் செயலாளர்கள் புறக்கணிப்பு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-03-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திராணி_பொன்வசந்த்&oldid=3665288" இலிருந்து மீள்விக்கப்பட்டது