இரயில்வே துடுப்பாட்ட விளையாட்டரங்கம்

இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ளது

இரயில்வே துடுப்பாட்ட விளையாட்டரங்கம் (Railway Cricket Ground) இந்தியாவின் இராசத்தான் மாநிலம் செய்ப்பூர் நகரத்தில் உள்ளது. பல்நோக்கு விளையாட்டு அரங்கமான இங்கு கால்பந்து , துடுப்பாட்டம் மற்றும் பிற விளையாட்டுகளுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இரயில்வே துடுப்பாட்ட விளையாட்டரங்கம்
Railway Cricket Ground
முழு பெயர் இரயில்வே துடுப்பாட்ட விளையாட்டரங்கம்
இடம் செய்ப்பூர், ராஜஸ்தான்
எழும்பச்செயல் ஆரம்பம் 1963
திறவு 1963
உரிமையாளர் வடக்கு இரயில்வே
ஆளுனர் வடக்கு இரயில்வே
குத்தகை அணி(கள்) இராசத்தான் ஒன்றிய கால்பந்துக் கழகம்
அமரக்கூடிய பேர் 5,000

1964 ஆம் ஆண்டு இராசத்தான் துடுப்பாட்ட அணி தில்லி துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடியது[1] முதல் 1989 ஆம் ஆண்டு வரை இங்கு 9 ரஞ்சிக் கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளன.[2] அப்போது முதல் இங்கு முதல் தரமல்லாத இதர துடுப்பாட்டப் போட்டிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன.[3]

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு