இராமசாமி பரமேஸ்வரன்
மேஜர் இராமசாமி பரமேஸ்வரன் (Ramaswamy Parameswaran), பரம் வீர் சக்கரம் (13 செப்டம்பர் 1946, மும்பை – 25 நவம்பர் 1987) இந்தியாவின் மும்பை நகரத்தில் 1946-இல் பிறந்த பரமேஸ்வரனின் தந்தை பெயர் இராமசாமி ஆகும். இவர் இந்திய அரசு நடத்தும் இராணுவ அதிகாரிகளுக்கான நுழைவுத் தேர்வில் (Short Service Commission) வென்று, 16 ஜனவரி 1972 அன்று இந்திய இராணுவத்தின் மகர் ரெஜிமெண்டின் 15-வது பட்டாலியனில் இராணுவ அதிகாரியாக பணியில் சேர்ந்தார். ஈழப் போரின் போது இந்திய அமைதி காக்கும் படை இணைந்த பரமேஸ்வரன் பவான் நடவடிக்கையின் பல வீரதீர சாகசங்கள்[தெளிவுபடுத்துக] செய்து, 25 நவம்பர் 1987-இல் வீரமரணம் அடைந்தார். மேஜர் பரமேஸ்வரனின் இறப்பிறகுப் பின்னர், பரமேஸ்வரனின் வீரச் செயல்களைப் பாராட்டி, இந்தியக் குடியரசுத் தலைவர், மேஜர் பரமேஸ்வரனின் குடும்பத்தினர் மூலம் 1988-ஆம் ஆண்டில் பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[1][2]
இரா. பரமேஸ்வரன் | |
---|---|
{{{lived}}} | |
![]() | |
பிறப்பு | செப்டம்பர் 13, 1946 |
இறப்பு | 25 நவம்பர் 1987 | (அகவை 41)
சார்பு | ![]() |
பிரிவு | ![]() |
சேவை ஆண்டு(கள்) | 1972-1987 |
தரம் | ![]() |
அலகு | மகர் ரெஜிமெண்ட் இந்திய அமைதி காக்கும் படை |
சமர்/போர்கள் | ஈழப் போர் பவான் நடவடிக்கை |
விருதுகள் | ![]() |
மரபுரிமைப் பேறுகளதொகு
1998-இல் சென்னை ஆற்காடு சாலையில் முன்னாள் இராணுவத்தினருக்கு கட்டப்பட்ட குடியிருப்பு காலனிக்கு மேஜர் பரமேஸ்வரின் நினைவாக மேஜர் பரமேஸ்வரன் விகார் எனப்பெயரிட்டு மரியாதை செய்யப்பட்டது. மேலும் சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள சிறீநகர் காலனியில் இயங்கும் முன்னாள் இராணுவத்தினர் நலச்சங்க கட்டிடத்திற்கு மேஜர் பரமேஸ்வரன் மாளிகை எனப்பெயரிட்டு மரியாதை செய்யப்பட்டது. புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னம் வளாகத்தில் பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்களுக்கான வரிசையில் மேஜர் பரமேஸ்வரனின் மார்பளவுச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ MAJ RAMASWAMY PARAMESWARAN, PARAM VIR CHAKRA (Posthumous)
- ↑ The Param Vir Chakra Winners (PVC), Official Website of the Indian Army, 28 August 2014 அன்று பார்க்கப்பட்டது