ஈ. எல். ஆதித்தன்

தமிழ்த் திரைப்பட நடிகர்

ஈ. எல். ஆதித்தன் (ஓலிப்பு) (இறப்பு: 12 நவம்பர் 2015) தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

ஆதித்தனின் இயற்பெயர் மலைப்பெருமாள். இவர் தமிழ்நாடு, காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்தவர். இவர் கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியில் கல்வி பயின்றவர். பள்ளியில் படிக்கும் போது நாடகங்களில் நடித்து பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார். இவருக்கு சந்திரா, பத்மா என இரண்டு மனைவிகளும், 5 மகன்களும், 4 மகள்களும் உள்ளவர்.[1]

ஆதித்தன் 1965 ஆம் ஆண்டில் விளக்கேற்றியவள் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். தாய்வீட்டு சீதனம் (1975), தாயும் மகளும், தனிப்பிறவி உட்பட பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்தார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "காலமானார் நடிகர் ஆதித்தன்". தினமணி. 15 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._எல்._ஆதித்தன்&oldid=3680904" இலிருந்து மீள்விக்கப்பட்டது